சிறுவர்மணி
குறள் பாட்டு
பொருட்பால் - அதிகாரம் 40 - பாடல் 8
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஒரு பிறப்பில் கற்ற கல்வி
எத்தனை பிறவி பிறந்தாலும்
உடனிருந்தே நன்மை செய்யும்
ஒழுக்கம் உயர்வு தந்திருக்கும்
எழுகின்ற பிறவி எல்லாமே
கற்றது தொடர்ந்து வந்துவிடும்
ஏழு பிறப்பும் கற்ற கல்வி
ஆன்மாவில் உறைந்து நன்மை செய்யும்.