கொல்லாமை
அறத்துப்பால் - அதிகாரம் 33 - பாடல் 8
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
உயிரைக் கொல்லும் வியாபாரம்
நல்ல லாபம் தந்தாலும்
அதனைச் செய்ய எண்ணாமல்
அன்பால் வாழ வேண்டுமே!
கொன்று தின்று வாழ்வது
பொருளை அள்ளித் தந்திடலாம்
சான்றோர் அதனை இழிவாக
எண்ணி வெறுத்து வாழ்வரே!