முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
குறள் பாட்டு: நிலையாமை
By | Published On : 19th March 2022 05:04 PM | Last Updated : 19th March 2022 05:04 PM | அ+அ அ- |

அறத்துப்பால் - அதிகாரம் 34 - பாடல் 8
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
கூடு கட்டி வாழ்ந்திடும்
பறவை முட்டையிட்டிடும்
முட்டை குஞ்சு ஆனதும்
இரையூட்டிப் பறக்கப் பழக்கிடும்
கூட்டை விட்டுப் பறவைகள்
வேறு இடம் பறந்திடும்
அதைப்போலவே தங்கும் உயிர்
உடலை விட்டுப் பறந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்