தவளையின் குணம்
By DIN | Published On : 02nd October 2022 06:00 AM | Last Updated : 02nd October 2022 06:00 AM | அ+அ அ- |

தவளை குளிர் ரத்தப் பிராணி. நிலம், நீரில் வாழும் உயிரினம். இதன் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், ஈரமாகவும் இருக்கும். தவளை வாய் மூலம் நீர் அருந்துவதில்லை.
குளிர்காலத்தில் அசைவற்று உடல் செயல்களை நிறுத்தி மாதக் கணக்கில் தூங்கும். அப்போது அதன் உடலில், ரத்தம் உறைந்து விடும். சில இனங்கள் மட்டும் குளிர் குறைந்த இடம் நோக்கி பெயரும். மழை பெய்தவுடன், கொட்ட, கொட்ட விழிக்கும்.