மனித நேயம்: தாய்ச் சொல்!

ஓர் இளைஞனின் குடிசை வாசலுக்கு குளிரில் நடுங்கிக்கொண்டே வந்த வயதான முதியவர் இளைஞனை பார்த்து, ""இன்று இரவு மட்டும் நான் உன் குடிசையில் தங்கிக்கொள்ளலாமா?'' என்று கேட்டார். உடனே இளைஞன், ""நீங்கள் கடவுளை
Published on
Updated on
1 min read

ஓர் இளைஞனின் குடிசை வாசலுக்கு குளிரில் நடுங்கிக்கொண்டே வந்த வயதான முதியவர் இளைஞனை<> பார்த்து, ""இன்று இரவு மட்டும் நான் உன் குடிசையில் தங்கிக்கொள்ளலாமா?'' என்று கேட்டார்.

உடனே இளைஞன், ""நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?'' என்று கேட்டான்.

அதற்கு முதியவர், ""இல்லை. நான் இயற்கையை மட்டுமே வணங்குபவன்'' என்றார்.

""அப்படியென்றால் முதலில் வெளியே போ'' என்று முதியவரை விரட்டிய இளைஞன் குடிசையை மூடிவிட்டு<> படுத்தான்.

அவன் கனவில் கடவுள் தோன்றி, ""80 ஆண்டுகளாக என்னை நம்பாத ஒருவனை நான் வாழவைக்கும்போது, நீ ஓர் இரவு தங்க வைக்கக்கூடாதா?'' என்று கேட்டாராம். மனிதநேயம்தான் சிறந்த மதம் என்று அப்போது அந்த இளைஞன் புரிந்துகொண்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com