எஸ். ராஜம் வரைந்த கர்நாடக இசை மூவரான தியாகராஜர்-முத்துசாமி தீட்சிதர்-சியாமா சாஸ்திரி ஓவியங்கள், பல சபாக்களிலும், வீடுகளிலும் அலங்கரிக்கின்றன. நவக்கிரகங்களாகட்டும், நாயன்மார்கள் கதைகளாகட்டும், ராஜம் வரைந்தால் அவற்றின் அழகே தனியாகத் தெரிந்தது. ஒரு முறை ஒரு பெண்மணி அவருடைய ஓவியங்களை அப்படியே டிரேஸ் செய்து, வர்ணம் தீட்டி, ஓர் ஓவியக் காட்சி நடத்தினார். ராஜத்தின் சகோதரர் வீணை பாலசந்தர் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கோபப்பட்டார். ராஜத்திடம் போய், "அந்தப் பெண் இப்படி அநியாயம் பண்ணியிருக்கிறாள். நீ ஏன் சும்மா இருக்கிறாய்?' என்று கேட்டார். ராஜம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லையாம். ""போகட்டும், விடு...'' என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.