மாவீரன் ஜூலியஸ் சீசர் பிரிட்டனின் மீது படையெடுத்து வென்றது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரே கைதியாகப் பிடிபட்ட விஷயம் பலருக்குத் தெரியாது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சீசரைக் கடல் கொள்ளையர்கள் பிடித்துச் சிறையிலிட்டார்கள். அப்போது அவர் இளைஞர். சீசரை விடுவிக்க வேண்டுமானால் நிறையப் பணம் வேண்டும் என்றார்கள் கொள்ளையர்கள். சீசரின் நண்பர்கள் கொள்ளையர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து அவரை மீட்டார்கள். இதை நினைவில் கொண்ட சீசர், பிற்காலத்தில் கடல்கொள்ளையர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றார்.
- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.