தந்திகளும் மந்திகளும்

காட்டில் மாலை நேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தைத் தேடிப் போகின்றன. கம்பர் இதை இரு அடிகளில் பாடியுள்ளார்.
தந்திகளும் மந்திகளும்

காட்டில் மாலை நேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தைத் தேடிப் போகின்றன. கம்பர் இதை இரு அடிகளில் பாடியுள்ளார்.
 "தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
 மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின'
 தந்தி என்பது ஆண் யானையையும், பிடி என்பது பெண் யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே பெண் யானை குளத்தை நோக்கிச் சென்றதாம்; குரங்குகளைச் சொல்லும்போது பெண் குரங்கு முன்னேசெல்ல ஆண் குரங்கு பின்னே சென்றதாம். ஏன் தெரியுமா?
 எப்பொழுதும் காட்டில் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாட அங்கே புலி, சிங்கம் முதலியவை மறைந்திருக்கும். எனவே, ஆண் யானை முன்னே சென்று விலங்கு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்க முன்னே பாதுகாப்பாகச் செல்கிறதாம்.
 குரங்குகளைப் பொருத்தவரையில், முன்னே செல்லும் பெண் குரங்கு மரத்தில் ஏறி மேலே சென்று தூங்குவதற்கேற்ற நல்ல கிளையில் உட்கார்ந்து கொள்ளும். பின்னால் வரும் ஆண் குரங்கு எல்லாம் ஏறிய பிறகு அடிமரத்தின் கிளையில் இரவில் வேறு விலங்குகள் வந்தால் தடுப்பதற்கேற்றவாறு பாதுகாக்க உட்கார்ந்து கொள்ளும். எனவேதான் இங்கே பெண் குரங்கை முதலிலும், ஆண் குரங்கை பின்னாலும் வைத்துக் கம்பர் பாடினார்.
 கம்பர் குளக்கரையில் ஆண் யானையை முன் வைத்தும், மரத்தில் பெண் குரங்கை முன் வைத்தும் பாடியுள்ளது அவரின் கவித்திறனுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com