பெரியோரைச் சார்ந்தொழுகுக!

இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை
பெரியோரைச் சார்ந்தொழுகுக!

பழமொழி நானூறு
 பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
 இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
 போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
 சார்ந்து கெழீஇயிலார் இல். (பா-92)
 இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை. (க-து) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன் பெறுவர் என்பதாம். "பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com