நன்றே ஒருவர்த் துணையுடைமை பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் இல்லையே
ஒன்றுக் குதவாத ஒன்று. (பாடல்-111)
ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே! ஒருவர் ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் நல்ல தொன்றே. பாம்பான் வரக்கடவதொரு துன்பத்தை, பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும் (அதனை) நீக்குதலால், சொல்லுமிடத்து, ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும் இல்லை. (க-து.) துணைபெற்று வழிச்செல்லுதல் நல்லது. "ஒன்றுக் குதவாத ஒன்று இல்லை' என்பது பழமொழி.