நண்பரைப் பிரிதல் துன்பம் தரும்!

அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே! விலங்கேயாயினும் தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை
 நண்பரைப் பிரிதல் துன்பம் தரும்!

பழமொழி நானூறு
 விலங்கேயும் தம்மோ டுடனுறைதல் மேவும்
 கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
 தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே
 பேஎயோ டானும் பிரிவு. (பாடல்-122)
 அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே! விலங்கேயாயினும் தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை, விட்டு நீங்குதல் செய்யாது. (ஆதலால்), தம்மோடு நட்புச் செய்து துன்பத்தை விளைவிக்கும் பேயேயானாலும் விட்டுப் பிரிதல் துன்பத்தைத் தருவதாம்.
 (க-து.) தம்மோடு கலந்து பழகி மனம் ஒன்றுபட்ட நண்பினரைப் பிரிதல் துன்பந்தருவதாம்.
 "இன்னாதே பேஎயோடானும் பிரிவு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com