ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்

 கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும்
 ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்

பழமொழி நானூறு
 கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
 ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
 பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
 திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)
 கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம். (அதுபோல), கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம். (க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்டநாள் தங்கியிருத்தல் ஆகாது. "திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com