பழமொழி நானூறு
கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பின்
பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே
அட்டாரை ஒட்டாக் கலம். (பாடல்-118)
கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை. சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப் பொருளுமில்லை. (ஆதலால்), பாதுகாவலுடையதாகுமாறு செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின், அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற காரியத்தைச் செய்ய வையாதொழிக.
"தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி.