பேராசை கொண்டோர்க்கு பெரும்பொறுப்பு தரவேண்டாம் 

கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை. சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப் பொருளுமில்லை
பேராசை கொண்டோர்க்கு பெரும்பொறுப்பு தரவேண்டாம் 

பழமொழி நானூறு
 கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பின்
 பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க
 தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே
 அட்டாரை ஒட்டாக் கலம். (பாடல்-118)
 கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை. சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப் பொருளுமில்லை. (ஆதலால்), பாதுகாவலுடையதாகுமாறு செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின், அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற காரியத்தைச் செய்ய வையாதொழிக.
 "தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com