இயன்ற அறத்தைச் செய்க!

 அறிவின் மயக்கம், அஞ்சத்தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவற்றுடன் சேர்ந்து,
 இயன்ற அறத்தைச் செய்க!

பழமொழி நானூறு
 
 தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
 ஆற்றும் துணையும் அறஞ்செய்க மாற்றின்றி
 அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து
 துஞ்சு வருமே துயக்கு. (பாடல்-137)
 அறிவின் மயக்கம், அஞ்சத்தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவற்றுடன் சேர்ந்து,
 தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோன்றுதற்று அருமையாகிய
 இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க. (க-து.)
 ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான் அறம் செய்க. "துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com