பழமொழி நானூறு
தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க மாற்றின்றி
அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து
துஞ்சு வருமே துயக்கு. (பாடல்-137)
அறிவின் மயக்கம், அஞ்சத்தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவற்றுடன் சேர்ந்து,
தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோன்றுதற்று அருமையாகிய
இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க. (க-து.)
ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான் அறம் செய்க. "துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.