தீய நாயின் செயல்
பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண் டொழுகல் - வெறியொலி
கோநா யினம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு. (பாடல்-139)
வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சா நின்ற மலைநாட்டை
உடையவனே! வலியிற் சிறியவர்கள், வலியாற் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடத்து அறியாமையையே பற்றுக்கோடாகக் கொண்டு, மாறுபாடு கொண்டு ஒழுகற்க. (அது), தீய நாய் நாட்டின் கண் புகுந்தால் உறங்கா நின்ற கரடியை எழுப்புகின்றதை ஒக்கும். "புலம்புகின் தீநாய் எழுப்புமாம்
எண்கு' என்பது பழமொழி.