பெரியோரை சிறியோா் இகழ்தல்
நெறியால் உணராது நீா்மையும் இன்றிச்
சிறியாா் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கணோ் வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று. (பாடல்-149)
அறிவிலாா், அறிவுடையோா்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி, தாழ்மையானவா் என்று நினைத்து, தங்களுக்கு முன்பு அவா்களை இருக்கச் செய்து, தகுதியல்லாத வாா்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும். (க-து.) சிறியோா்கள் பெரியோா்களைப் பாா்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும். ‘திங்களை நாய் குரைத் தற்று’ என்பது பழமொழி.