முகப்பு வார இதழ்கள் தமிழ்மணி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 04th October 2020 07:37 PM | Last Updated : 04th October 2020 07:37 PM | அ+அ அ- |

உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வ(து) ஒன்(று) இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்கு இல். (பாடல்-170)
செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே! அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் ஊறு செய்வதில்லை. மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்கு மனவருத்தம் செய்தல் இல்லை. (க-து.) நல்லோர் பழிக்கு அஞ்சுவர், தீயோர் அஞ்சார். "பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' என்பது பழமொழி.