நிகழ்வுகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, மேட்டுத்தெருவில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எழுந்தருளிய உப்பங்கோட்டை எனும் சமுத்திர தீர்த்தக்கரையில் உள்ளது

பிரம்மோற்சவம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, மேட்டுத்தெருவில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எழுந்தருளிய உப்பங்கோட்டை எனும் சமுத்திர தீர்த்தக்கரையில் உள்ளது ஸ்ரீ அபீஷ்டவரத மஹாகணபதி ஆலயம். இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13 -இல் தொடங்கி 24 வரை நடைபெறுகின்றது. உற்சவ காலங்களில் காலை 8.00 மணி மற்றும் இரவு 8.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ அபீஷ்டவரத மஹா கணபதி சேவா டிரஸ்ட் செய்துள்ளது. 
தொடர்புக்கு: 94435 61685 / 94423 26486.
கணபதிக்கு கல்யாணம்!
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ளது மெலட்டூர் கிராமம். பாகவத மேள நாட்டிய நாடகங்களுக்கு பிரசித்தி பெற்ற ஊர். இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி சமேத ஸ்ரீதட்சிணா மூர்த்தி விநாயகர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் 7 -ஆம் நாள் நடைபெறும் விநாயகர் திருக்கல்யாணம் வைபவம் மிகவும் விசேஷமானது. அவ்வமயம், திருமணப்பேறு வேண்டி நாடெங்கிலும் உள்ள பக்தர்கள் திருமண வயதில் உள்ள தங்கள் மகள் அல்லது மகனுடன் வந்திருந்து பலன் அடைவது கண்கூடு. இவ்வாண்டு, செப்டம்பர் 10 -ஆம்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 
தொடர்புக்கு : 99943 67113 / 098440 96444.
மஹாகும்பாபிஷேகம்
சென்னை, செம்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நூதன ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம், செப்டம்பர் 12 -ஆம் தேதி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: என். ஸ்ரீநிவாஸன் - 94441 35353.
***************
சென்னை, சூளைமேடு, முதல் தெரு, வீரபாண்டியன் நகரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக விழா 12.09.2018, காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெறும்.
****************
திருவாரூர், நன்னிலம், 38 ஆலங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள்புரியும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகதீஸ்வரர் மற்றும் பூர்ணபுஷ்கலாம்பாள் சமேத மஹா சாஸ்தா ஆலயத்தில் செப்டம்பர் 12 -ஆம் தேதி, காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை விமானம் மற்றும் மூலவர்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
மஹாசம்ப்ரோக்ஷணம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், எரமலூர் கிராமத்தில் உள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுந்தரவரத லஷ்மீநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாகச் சிதலமடைந்திருந்த நிலையில் எரமலூர் ஸ்ரீ சுந்தர வரத லட்சுமிநாராயணப் பெருமாள் கைங்கர்ய டிரஸ்ட் மூலம் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, மஹாசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 12 -ஆம் தேதி, காலை 10.30 மணி அளவில் நடைபெறும். 
தொடர்க்கு: 98405 78398 / 99947 83677.
பாலாலய ஸ்தாபனம்
சென்னை - அரக்கோணம் செல்லும் வழியில் தக்கோலத்திற்கு முன்பாக 4. கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சிவாக்கம் (காஞ்சி மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் வட்டம்) இங்குள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு பரமானந்தவல்லி உடனுறை ஸ்ரீபட்டமுடீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பாலாலய ஸ்தாபனம் (பூமி பூஜை) செப்டம்பர் 12 -ஆம் தேதி, காலை 04.30 - 6.00 மணிக்குள் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 90924 15100 / 95249 49373.
அதிபத்தநாயனார் திருவிழா
நாகப்பட்டினத்தில் அருள்மிகு அதிபத்த நாயனார் அவதரித்த மீனவ தலைமை கிராமம் நம்பியார் நகர், புதிய கடற்கரைப் பகுதியில் அதிபத்தநாயனார் திருவிழா செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறுகின்றது. அன்று மதியம் 1.00 மணி அளவில் நாகை ஸ்ரீநீலாயதாட்சியம்மன் திருக்கோயிலிருந்து ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கடற்கரைக்கு எழுந்தருள்வர். தொடர்ந்து அதிபத்த நாயனார் உற்சவ மூர்த்தி அடியார்களுடன் கடற்கரை வருதலும், நாயனார் இறைவனுக்கு தங்கமீனை சிவார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இறுதியாக அம்மையப்பன் நாயனாருக்கு காட்சியருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.
சஷ்டி வர்தந்தி மகோத்ஸவம்
சென்னை, மேற்கு மாம்பலம், யோகசாந்தி குருகுலம் ஸ்தாபகர் குருஜி சுவாமி பிரம்மயோகனந்தாவின் சஷ்டி வர்தந்தி மகோத்ஸவம் தியாகராய நகர் கிருஷ்ணகான சபாவில் செப்டம்பர் 9 -ஆம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் அன்று மாலை 3.00 மணி முதல் தொடர்ந்து நடைபெறும். 
தொடர்புக்கு : 98408 32624 / 99404 54596.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com