நிகழ்வுகள்

குரோம்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணா நகர் இரண்டாவது மெயின் ரோடில் உள்ள ஸ்ரீராம பக்த சமாஜ மண்டபத்தில் 40 -ஆம் ஆண்டு ஸ்ரீ கோகுலாஷ்டமி உத்ஸவம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகின்றது

ஸ்ரீ கோகுலாஷ்டமி உத்ஸவம்
 குரோம்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணா நகர் இரண்டாவது மெயின் ரோடில் உள்ள ஸ்ரீராம பக்த சமாஜ மண்டபத்தில் 40 -ஆம் ஆண்டு ஸ்ரீ கோகுலாஷ்டமி உத்ஸவம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகின்றது. விழா நாள்களில் பாகவத மஹாத்மீய மூல பாராயணம், ஸ்ரீ மத் பாகவத ஸப்தாஹ மூலபாராயணம், அச்சித்ர அஸ்வமேத வேத பாராயணம், ஸ்ரீ சுந்தரகாண்ட மூலபாராயணம், ஸ்ரீ முக பஞ்சசதீ பாராயணம், பஜன் போன்றவை நடைபெறுகின்றன. செப்டம்பர் 8-ஆம் தேதி ஸ்ரீ ருக்மணி கல்யாணத்துடன் விழா முடிவடைகின்றது.
 தொடர்புக்கு: 98412 84637 / 98409 70419.
 குருபூஜை
 திருச்சி, வரகனேரி, குழுமிக்கரையில் ஸ்ரீ மாணிக்க சுவாமிகள் மடாலயம் உள்ளது. இங்கு, ஸ்ரீலஸ்ரீ பெரிய மாணிக்க சுவாமிகளுக்கு ஆகஸ்ட் 23 -ஆம் தேதியும்; ஸ்ரீலஸ்ரீ சின்ன மாணிக்க சுவாமிகளுக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதியும் முறையே, காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில் குருபூஜை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98657 21701.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com