பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன்; கணவன் மனைவிக்கு அணிகலன்; அரசன் குடிகளுக்கு அணிகலன்; கல்வியறிவோ அனைவருக்கும் அணிகலனாகும். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன்; கணவன் மனைவிக்கு அணிகலன்; அரசன் குடிகளுக்கு அணிகலன்; கல்வியறிவோ அனைவருக்கும் அணிகலனாகும். 
- கெளடில்ய அர்த்தசாஸ்திரம் 
• உங்களுக்கு, "இறைவனுக்குச் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் இருந்தால், அந்தப் பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
- வடலூர் வள்ளலார்
• புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால், உள்ளத்தின் ஆழத்தில் உறையும் ஈசனை நீ உறுதியாகக் காண்பாய். 
- ஆதிசங்கரர்
• பிற எளிய உயிர்களைப் பலியிடுவதால் ஒருவன் மேன்மையடைய முடியாது. அவ்வாறு பலியிடுவது மிகப் பெரிய பாவம். 
- புத்தர்
• ஜீவகாருணிய ஒழுக்கத்திற்கு முதல்படியாக அமைந்திருப்பது புலால் உண்ணாமையாகும். 
- வடலூர் வள்ளலார்
• தீய செயல்களைச் செய்யும் மக்கள் சமூகம், வசந்தம் முதலிய பருவ காலங்கள், அந்த அந்தப் பருவங்களுக்கேற்ப மலர்களைப் பெறுவதுபோல, காலம் வந்தபொழுது கொடிய பயனை நிச்சயம் அனுபவிக்கிறது. 
- வால்மீகி ராமாயணம்
• எந்த உயிரும், தனது உயிரை அருமையாகவும் புனிதமாகவும் நேசிக்கும் எந்த உயிரும், இறக்க விரும்பாது. துன்பம், நோய், மரணம் ஆகிய மூன்றையும் எந்த உயிருமே விரும்புவதில்லை. ஆகையால் அகிம்சைதான் அனைத்திலும் தலையாய அறம். ஆகவே, ஒவ்வொருவரும் தமது உயிரை நேசிப்பது போலவே பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும். 
- மகாவீரர் 
• எல்லா உயிரையும் தன் உயிர்போல் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பது மேல், ஊனைத் தின்று ஊனை வளர்க்காமல் இருப்பது இனிது.
• நண்பர்களுக்கு நல்லதைச் செய்வது நல்லது. நல்லதைச் செய்து தீமையை விரட்ட முனைவது நல்லது. கடன் பெற்றாவது நல்லதைச் செய்வது நல்லது. தங்களை வந்து அடைந்தவர் துன்பத்தைப் போக்க முயல்வது இனியதாகும்.
- இனியவை நாற்பது
• துன்பத்தை ஒழிக்கும்பொருட்டுப் புனித வாழ்க்கை நடத்துங்கள். 
- புத்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com