நிகழ்வுகள்

குரோம்பேட்டை நேரு நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் 24 -ஆவது ஆண்டு பங்குனி உத்திர மகோத்ஸவம்,

நவ கலஸ சிறப்பு திருமஞ்சனம்
குரோம்பேட்டை நேரு நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் 24 -ஆவது ஆண்டு பங்குனி உத்திர மகோத்ஸவம், மார்ச் 21 -ஆம் தேதி - எஸ்.சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நாதஸ்வர இன்னிசை, சிறப்பு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போன்றவைகளுடன் நடைபெறுகின்றது. இதற்கென்று பிரத்யேகமாக குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ பூமி நீளா சமேத லட்சுமி நாராயணப்பெருமாள் உற்சவமூர்த்தி எழுத்தருளச் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் அன்று காலை 8.00 மணியிலிருந்து ஆரம்பமாகிறது. 
தொடர்புக்கு: 98414 98690 / 044 - 22237480
பங்குனி உத்திர மஹோத்ஸவம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள திருச்சோற்றுத் துறை ஸ்ரீ அன்னபூரணி அம்பிகா சமேத ஸ்ரீ ஓதவனேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்ச் 18 - அதிகாரநந்தி, காமதேனு வாகனம், மார்ச் 20 - திருத்தேர், மார்ச் 21 - தீர்த்தவாரி, ரதம். 
தொடர்புக்கு: 99438 84377.
***********************
நாச்சியார் கோயில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருத்தேர் திருவிழா, மார்ச் 21 வரை நடைபெறுகின்றது. மார்ச் 15 - கல்கருட சேவை, மார்ச் 20 - திருத்தேரோட்டம். 
தொடர்புக்கு: 0435 - 2467167.
**********************
மதுரை சௌராஷ்டிர சபைக்கு பாத்தியமான ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் 125- ஆது ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோத்தஸவம் மார்ச் 23 வரை நடைபெறுகின்றது. மார்ச் 15- ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம், மார்ச் 16- திருக்கல்யாணம் , மார்ச் 17- திருப்பல்லக்கு வெண்ணெய் தாழி கிருஷ்ணன், மார்ச் 18 - திருத்தேர், மார்ச் 22- மோஹினி அலங்காரம்; மார்ச் 23- கள்ளர் திருக்கோலத்துடன் புறப்பாடு.
உருத்திரபாகத் திருவிழா
தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் வட்டம் திருபுவனம் அருள்மிகு ஸ்ரீ கம்பகரேசுவரசுவாமி ஆலயத்தில் உருத்திர பாதத் திருவிழா நடைபெற்று வருகின்றது. மார்ச் 16 - சகோபுர தரிசனம், மார்ச் 18 - திருக்கல்யாணம், மார்ச் 19 - ரதாரோகணம், மார்ச் 20 - திருத்தேர், மார்ச் 21 - காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் மார்ச் 24 - ஸ்ரீ சரபேஸ்வரர் ஏக தின உற்சவம், மார்ச் 25 - ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம்.
ஸ்ரீராதாமாதவ விவாக மகோத்சவம்
முற்றிலும் மகளிர் பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மகோத்ஸவம், சென்னை , அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச் 31-இல் நடைபெறுகின்றது. இதனையொட்டி பிரபல பாகவதர்கள் கலந்துகொண்டு நடத்தும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி மார்ச்- 29, 30 தேதிகளில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 93814 30775 .
திருக்கல்யாணம் 
பெரம்பலூர் மாவட்டம், திருமழப்பாடியில் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் மார்ச் 16 -ஆம் தேதி மாலை 7.00 - 9.00 வரை நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: கணேச சிவாச்சாரியார் - 98433 60716.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com