புஷ்பராகம்: இது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ளது. இதை அணிய உடல்நலம், நீண்ட ஆயுள், பெருமை, புகழ் சேரும். இது குருபகவானுக்குகந்த ரத்தினமாகும். இந்த ரத்தினத்தை அணிய சகல தோஷங்களும் நீங்கும். புத்திரபாக்கியம் இல்லையென்றால் புஷ்பராகம் அணிய குழந்தை பிறக்கும். முடக்குவாதம், ஹிஸ்டீரியா, மனஅதிர்ச்சி போன்ற வியாதிகள் நீங்கும். 3, 12, 21- ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் இதை அணியலாம். இதனை தங்கத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் குருபகவானின் ஹோரையில் குருபகவானை நினைத்து, வலது கை மோதிரவிரலில் அணிய வேண்டும். ஆள்காட்டி விரலிலும் அணியலாம்.