நிகழ்வுகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அம்மையப்பன் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாகம்பிரியாள் சமேத அம்மையப்பர் ஆலயம், மற்றும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்,

* மகாகும்பாபிஷேகம்
 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அம்மையப்பன் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாகம்பிரியாள் சமேத அம்மையப்பர் ஆலயம், மற்றும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ இடும்பன் ஆகிய ஐம்பெரும் திருக்கோயில்களுக்கு மகாகும்பாபிஷேகம் செப்டம்பர் 11 -ஆம் தேதி, காலை 6.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது. திருப்பனந்தாள் அருகில் காவிரிக்கு வடபாலும், கொள்ளிடத்திற்கு தென்பாலும் உள்ளது இந்த திருத்தலம். இவ்வூரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீ இடும்பனுக்கு தனி சந்நிதி உள்ளது. இவ்வாலயத்தில் மூன்று கார்த்திகை நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்தால் புத்திரபாக்கியம் கிட்டும்.திருமண தடை நீங்கும்.
 தொடர்புக்கு: 98400 53289.
 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, நெ. 43 பள்ளிவர்த்தி கிராமத்தில் அருள்மிகு கல்யாண விநாயகர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள், பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செப்டம்பர் 11- ஆம் தேதி, காலை 6.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகின்றது. இவ்வாலயங்கள் ஹரிச்சந்திரா நதிக்கரையில் திருக்கொள்ளிக்காடு அருகில் உள்ளது. கல்யாண மாகாத ஆண் / பெண்கள் இங்குள்ள கல்யாண விநாயகரை தரிசித்து அருகிலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபட்டால் உடனடியாக திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.
 தொடர்புக்கு: 94449 23949.
* பிரதோஷநாயகர் எழுந்தருளல் விழா
 திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்துள்ள செஞ்சிபானம் பாக்கம் கிராமத்தில் உள்ள மிகப்பழைமையான அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நூதன பிரதோஷ நாயகர் எழுந்தருளச் செய்யும் வைபவம் செப்டம்பர் 8 -ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு நடைபெற திருவருள் கூட்டியுள்ளது. இதனையொட்டி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன.
 தொடர்புக்கு: 93828 72358 / 97919 41005.
 உற்சவர் பிரதிஷ்டை
 மயிலாப்பூர், மந்தைவெளி, விஸ்வலிங்கச் செட்டித் தோட்டம், இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீராம மாருதி பக்தஜன சபையில் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக திருக்கோலம் பஞ்சலோகம் உற்சவ விக்ரஹ பிரதிஷ்டை மற்றும் மகாசம்ப்ரோஷணம் செப்டம்பர் 12 -ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் நடைபெறுகின்றது. பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் செப்டம்பர் 10 -இல் ஆரம்பமாகிறது. செப்டம்பர் 13 - ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறுகின்றது.
* ஏகாதச ருத்ராபிஷேகம்
 திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அருள்மிகு உத்பலாம்பாள் சமேத ஸ்ரீரிஷ்ய சிங்கீஸ்வரர் திருக்கோயிலில் உலக நன்மையை முன்னிட்டு செப்டம்பர் 8- ஆம் தேதி, ஏகாதச ருத்ரபாராயணம் மற்றும் அபிஷேகமும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிகள் அன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பூந்தமல்லி - திருவள்ளூர் சாலையில் அரண்வாயிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது திருவூர்.
 தொடர்புக்கு: 94456 93460.
 குறிப்பு: கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளை டிவியில் காண்பிப்பதாக அணுகும் நபருக்கும் "தினமணி'க்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com