நிகழ்வுகள் 

ஸ்ரீ காஞ்சி காமகோடி 59 -ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 327 -ஆவது ஆராதனை மகோத்சவம் கோவிந்தபுரத்தில் (கும்பகோணம் ஆடுதுறை வழித்தடம்) செப்டம்பர் 13 -இல் தொடங்கி

* ஆராதனை உற்சவம் 
ஸ்ரீ காஞ்சி காமகோடி 59 -ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 327 -ஆவது ஆராதனை மகோத்சவம் கோவிந்தபுரத்தில் (கும்பகோணம் ஆடுதுறை வழித்தடம்) செப்டம்பர் 13 -இல் தொடங்கி 27 -வரை நடைபெறுகின்றது. செப்டம்பர் 26 - ஸ்ரீ குருநாதரின் மகா ஆராதனை, செப்டம்பர் 27 - ஆஞ்சநேய உத்சவம். விழா நாள்களில் தினசரி ப்ரபோதன பூஜை, ஸ்ரீ மத்பாகவதம் மூலபாராயணம், உஞ்சவிருத்தி, பாகவதோத்தமர்களால் சம்பிரதாய அஷ்டபதி பஜனை, ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் ஸ்ரீமத்பாகவத உபன்யாஸம், திவ்ய நாமசங்கீர்த்தனம், டோலோத்சவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாடெங்கிலுமிருந்தும் பாகவதர்கள் இந்த ஆராதனை உத்சவத்தில் பங்கேற்கிறார்கள். தொடக்கநாளன்று ஸ்ரீ குருநாதாளின் உற்சவ மூர்த்தி புறப்பாடு வீதி பஜனையுடன் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 0435 - 2470620 / 2970621.
* ஜெயந்தி மகோத்சவம்
காஞ்சி மகாசுவாமிகளின் பூர்வாஸ்ரம சகோதரர் சிவன் சாரின் ஜெயந்தி மகோத்சவம் செப்டம்பர் 28- ஆம் தேதி, தியாகராய நகர் ஆர்.கே.மிஷன் பள்ளி வளாகத்திலும், செப்டம்பர் 29- ஆம் தேதி நங்கநல்லூர் ராமமந்திரம் மண்டபத்திலும் நடைபெறுகின்றது. இதனையொட்டி வில்லுப்பாட்டு, உபன்யாசம், பூஜை, வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். 
தொடர்புக்கு: 96000 15230 / 73584 81420.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com