பூமியிலிருந்து வெளிப்பட்ட பெருமாள்!

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குத்தனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீவேத நாராயணப்பெருமாள் ஆலய அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணம் ஜனவரி 30
பூமியிலிருந்து வெளிப்பட்ட பெருமாள்!

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குத்தனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீவேத நாராயணப்பெருமாள் ஆலய அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணம் ஜனவரி 30-ஆம் தேதி வியாழனன்று நடைபெறுகின்றது. கிருஷ்ண சமுத்திரம் என்ற திருத்தலப்பெயருடன் திகழும் இவ்வூரில் கி.பி. 1828 -ஆம் ஆண்டில் வசித்து இறையருளால் கீர்த்தனங்கள், ஹரிகதாகாலúக்ஷபங்கள் செய்து வந்த மகான் சின்னசாமி தாசருக்கு ஒரு நாள் அசரீராக இறைவன் குரல் கொடுத்து சுட்டிக்காட்டிய இடத்தில் அகழ்ந்து பார்த்தபோது பூமிக்குள் மறைந்து கிடந்த தேவியரோடு கூடிய பெருமாள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாராம். ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வேதநாராயணர் என்ற நாமம் சூட்டி, சிறந்த ஆலயம் அமைத்து 1855 -இல் குடமுழுக்குச் செய்து வணங்கி தன் வாக்கின் வழிவந்த பதினோரு பாடல்களால் மங்களாசாசனமும் செய்து போற்றியுள்ளார்.

1990 -ஆம் ஆண்டில் நடந்த சம்ப்ரோக்ஷணத்திற்குப் பிறகு, தற்போது இந்த ஆலயத்தில் ஆலய திருப்பணிக் குழு மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர், உடையவருக்கு, சந்நிதிகளும், சுதை மூர்த்திகளோடு நுழைவு வாயில் மண்டபமும், ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய சுவாமி தீபஸ்தம்பமும் அமைக்கப்பட்டு வருகின்றது. மஹாசம்ப்ரோக்ஷணத்தை ஒட்டி,  யாகசாலை பூஜை வைபவங்கள் ஜனவரி 28 -இல் ஆரம்பமாகிறது. 

இவ்வாலயம் செல்ல, காஞ்சிபுரம், ஆற்காடு, செய்யாரிலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.  

தொடர்புக்கு: 94434 69810 / 94980 09546. - கே.ஜி.சிவம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com