சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.
அமர்ந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது.
சென்னை-குன்றத்தூர் பொன்னியம்மன் கோயிலில் தலவிருட்சமாக இரண்டு மகிழம்பூ மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்; மற்றொரு மரம் பூக்காமலேயே காய் காய்க்கும்.