ஆலயங்கள் அற்புதங்கள்!

திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை கோயிலில் சுவாமியைத் தரிசிக்க உத்திராயண, தட்சிணாயன என்று இரு வழிகள் உள்ளன. முதல் ஆறு மாதங்கள், உத்திராயண வழி திறக்கப்படும்.
ஆலயங்கள் அற்புதங்கள்!

திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை கோயிலில் சுவாமியைத் தரிசிக்க உத்திராயண, தட்சிணாயன என்று இரு வழிகள் உள்ளன. முதல் ஆறு மாதங்கள், உத்திராயண வழி திறக்கப்படும். அடுத்த ஆறு மாதங்கள் தட்சிணாயன வழி திறக்கப்படும். புகழ்பெற்ற ஸ்வஸ்திக் குளம் இங்குள்ளது. இங்கு, ஒரு துறையில் குளிப்பவர்களை மற்றொரு துறையில் இருப்பவர்கள் பார்க்க முடியாது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருஈங்கோய் மலை உச்சியில் உள்ள மரகதேஸ்வரர் கோயிலில் உள்ள மரகதலிங்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் "ரதசப்தமி' அன்று சூரிய ஒளி நேராகப் பட்டு அந்த மரகதப் பச்சை நன்கு ஒளி வீசும்.

திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பங்குனி உத்திர நாளன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத்தின் மீது படும்படி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com