கர்த்தர் ஆதாம் ஏவாளை படைத்தார்

படைப்பின் வரலாறு வேதாகமத்தில் காணப்படுகிறது. கர்த்தர் நம்மைப் படைத்தார். அவர்களுக்குரிய உலகில் காணப்படும் எல்லாவற்றையும்  வானத்தையும் அதில் காணப்படுபவற்றையும் படைத்தார்.


படைப்பின் வரலாறு வேதாகமத்தில் காணப்படுகிறது. கர்த்தர் நம்மைப் படைத்தார். அவர்களுக்குரிய உலகில் காணப்படும் எல்லாவற்றையும்  வானத்தையும் அதில் காணப்படுபவற்றையும் படைத்தார். நிறைவாக, மனிதனையும் அவனின் துணையையும் படைத்தார், என வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. பல சமயங்கள் மனிதனின் படைப்பைப் பற்றி பல கதைகளைக் கூறுகின்றன.  அறிவியல் அறிஞர்கள் இவ்வுலகம் தாமே உண்டாயிற்று. உயிரினங்களும் தாமே உண்டாயிற்று என்பர்.
ஜப்பானில் படைப்பின் வரலாறு கூறப்பட்டுள்ளது. கடவுள் கோதுமை மாவில் நான்கு உருவங்களை உண்டாக்கினார். அவ்வுருவங்களை ரொட்டி சுடும் அடுப்பில் வைத்து வேக வைத்தார். வெந்திருக்கும் என நினைத்து வெளியில் எடுத்தார். அவ்வுருவம் வெண்மையாக வெந்திருந்தது.  உடனே அதற்கு உயிர் கொடுத்து ஐரோப்பாவுக்கு வெள்ளைகாரனாக வாழ அனுப்பினார். அடுத்த மாவு உரு மஞ்சள் நிறத்தில் வெந்திருந்தது.  அதற்கு உயிர் கொடுத்து, சீனா, ஜப்பானுக்கு அனுப்பிவிட்டார். அடுத்த உருவத்தை எடுத்தார். நன்கு வெந்து பிரவுன் நிறமுடையதாயிருந்தது. அதற்கு உயிர் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பினார். பின்பு அடுத்த உருவத்தை எடுத்தார். மிகவும் வெந்து கருப்பாயிருந்தது. அவ்வுருவத்துக்கு உயிர் கொடுத்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். இவ்வாறாக, நிறம் கொண்ட மனித வரலாறு சொல்லப்
படுகிறது.
வேதாகமத்தில் மிக விரிவான கர்த்தரின் படைப்பின் வரலாறு கூறப்பட்டுள்ளது. படைப்பு ஏழு நாள்கள் நடந்து முடிந்தது.  ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் வெளிச்சம் உண்டாக்கினார். வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்து பகல், இரவு எனப் பெயரிட்டார். பகலுக்குச் சூரியனையும் இரவுக்கு நிலாவையும் படைத்தார். ஆகாய விரிவுகளையும் பூமியில் நிலத்தையும் தண்ணீர் கடலையும் உண்டாக்கினார். உயிரினங்கள், பறவைகள், மரம், செடி, கொடிகளையும் பூக்கள், பழங்கள், தானியங்களையும் ஜீவ ஊற்று நதிகளையும் உண்டாக்கினார். தாம் படைத்தவற்றை கண்ட தேவன் நல்லது எனக் கண்டார். அவை பலுகிப்பெருக ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1:1-10) தேவன் பூமியின் மண் எடுத்து தேவ சாயலாக தம் உருவம் போல் ஆதாமை உண்டாக்கி அவனுக்கு தம் ஜீவ சுவாசத்தை ஊதி உயிர் பெற்ற மனிதனாகப் படைத்தார். 
பின்பு ஆதாமுக்கு ஒரு துணை படைக்க ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்போது ஆதாம் "இவள் என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி எனப்படுவாள்' என்றான். கர்த்தர் ஏதேன் என்னும் மிகச் செழுமையான அழகான தோட்டத்தை உருவாக்கி ஆதாம் ஏவாள் வாழ்விடமாக கொடுத்தார். 
ஆதாம் எல்லாவற்றுக்கும் பெயரிட்டு மகிழ்ந்தான். ஆதாம் ஏவாள் மிகவும் மனமகிழ்ச்சியுடன் தேவன் படைத்தது எல்லாம் தங்களுக்கே என அறிந்து,  தேவனிடத்தில் மிக அன்பு வைத்தனர். தாங்கள் தேவனின் சாயல் (உருவம்), தாங்கள் சுவாசிக்கும் மூச்சு தேவன் தந்தது என மிகவும் பெருமை கொண்டனர். அவர்கள் உண்ண உணவு எல்லாம் கர்த்தர் கொடுத்திருந்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன் தேவனோடு வாழ்ந்தார்கள். 
இவ்வாறு படைப்பின் வரலாறு கூறுகிறது. நாம் இறைவனின் படைப்பு, நம் உருவம் இறைவனின் சாயல், நாம் விடும் மூச்சு இறைவன் தந்தது. தேவனைப் போற்றி வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com