சென்னை, குரோம்பேட்டை, குமரன் குன்றம் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 43 -ஆவது ஆண்டு படித் திருவிழா ஏப்.14-ஆம் தேதி நடைபெறும்.
அன்று காலை 5.30 மணி முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
பல்வேறு திருப்புகழ் சபையினர் பங்கேற்று குமரன் குன்றம் படிகளில் திருப்புகழ் இன்னிசை பாடியபடி முருகன் சந்நிதியை அடைவர். அருணகிரி நாதர் அரங்கில் வாத்திய இசை, நூல்கள் வெளியீடு, நாட்டிய நிகழ்ச்சி போன்றவை இரவு 8 மணி வரை நடைபெறும். தொடர்புக்கு: 044 - 22235645.