திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூரில் "நின்றவூர் நித்திலத்தொத்து' என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவத்சலப்பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் மார்ச் 29 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2-ஆம் தேதி நாச்சியர் திருக்கோலமும், 4}ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 5}ஆம் தேதி அபூர்வ வெண்ணெய்த்தாழி திருக்கோலம், தொட்டித் திருமஞ்சனமும், 6}ஆம் தேதி காலை தீர்த்தவாரியும், திருமொழி சாற்றுமுறையும், 7}ஆம் தேதி துவாதச ஆராதனம், புஷ்பயாகம் ஆகியவை நடைபெறும்.
தகவலுக்கு: 04426390434; 9840192735.
-ஆர்.வி.