மணியோசை - 13.08.2021

டாக்டர் சுதா சேஷய்யனின் "பொருநை போற்றுதும்' தொடர் ஒரு வரலாற்று நாவலைப் போன்று விறுவிறுப்புடன் சுதந்திரத் தியாகிகளின் வீரவாழ்வை விளக்குகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றி..!
-கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-600001.

ஆடி கடைசி வெள்ளியில் ஜி.ஏ.பிரபா எழுதிய "சமயபுரம் மாரியம்மன்' கட்டுரை சாலப் பொருத்தம். கரோனாவினால் கோயிலுக்குச் செல்ல முடியாததால் மானசீகமாக வழிபட, வரப்பிரசாதமானது..!
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. 

இரா.இரகுநாதன் எழுதிய "பட்சிராஜனின் பஞ்சமி வழிபாடு' என்ற கட்டுரை படித்தேன். கருடனின் அவதார மகிமை, கருடனை வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையெல்லாம் விரிவாக விளக்கியுள்ளது அருமை..! 
-உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

"காலமுணர்த்தும் உத்தரவுப் பெட்டி!' என்ற கட்டுரை படித்தேன். திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் அமைந்திருக்கும் முருகன் கோயிலைப் பற்றிய விரிவான விளக்கமளித்த பனையபுரம் அதியமானுக்கு நன்றி..!
-ஜீவன்.பி.கே., கும்பகோணம். 

ஹேமமாலினி சங்கரன் எழுதிய "ஜடப் பொருளும் பேசும்' என்ற கட்டுரை மூலம், நமக்காக பயன்பட்ட பொருள்களை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையை அன்னையின் அருளால் உணர முடிந்தது..!
-கூத்தப்பாடி பழனி, பெண்ணாகரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com