இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்: வாரப்பலன்கள்

ஜூலை 9 முதல் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்: வாரப்பலன்கள்
இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்: வாரப்பலன்கள்

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் இடையூறுகள் தோன்றினாலும், பொறுமையுடன் செயல்பட்டு சமாளித்து முடித்து விடுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் அன்பு பாராட்டுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தியானம் செய்வதன் மூலம் உங்கள் உற்சாகத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வராத பாக்கிகள் வசூலாகும். சொத்து தொடர்பான பேரங்களில் நல்ல முடிவு எற்படும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய நிலங்கள் வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை வராது என்றாலும் கவனத்துடன் இருக்கவும். வாழ்வில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். பொருளாதார நிலைமை சீராகவே இருக்கும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கினாலும் சற்று சிக்கனமாக இருக்கவும். குடும்பத்தினரின் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாணவமணிகள் வெளிநாட்டு படிப்புக்காக தயார் செய்வீர்கள். சக மாணவர்களுடன் கலந்தாலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீசிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

***
ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சகோதர, சகோதரி வகையில் உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து வழக்குகளில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். 
உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும். மேலதிகாரிகளின் கெடுபிடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள். எவருக்கும் முன் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். விவசாயிகள் சந்தையில் நல்லபடியாக விளைபொருள்களை வியாபாரம் செய்வீர்கள். கால்நடைகள் பராமரிப்பில் கவனம் தேவை. 
அரசியல்வாதிகள் அனுகூலமான செய்திகளைக் கேட்பீர்கள். பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் துணிந்து செய்யும் வேலைகளில் நேர்த்தியாக இருப்பீர்கள். உங்கள் படைப்புகள் பிறரால் பாராட்டப்படும். பெண்மணிகள் பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பு விஷயத்தில் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்து கொள்ளவும். தியானம், யோகா, உடற்பயிற்சி அவசியம்.
பரிகாரம்: ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

***
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் பழைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எவரிடத்திலும் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். குடும்பத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபடுவீர்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆன்மிக ஈடுபாடு அவசியம். 
உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் ஏற்படும். வருமானத்தை மேலும் பெருக்கக் கடன் வாங்காதீர்கள். விவசாயிகள் மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.  நல்ல வருமானம் கால்நடைகள் மூலமாகக் கிடைக்கும். 
அரசியல்வாதிகள் தொண்டர்களின் குடும்பங்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து வருவீர்கள். மேலிடத்தின் கட்டளைகளை நல்லபடியாக நிறைவேற்றி விடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரத் தாமதமாகும். பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவரின் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். மாணவமணிகள் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: இல்லை.
***

கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்ட வேலைகள் சற்றுத் தாமதமாக வெற்றியடையும். மனச்சோர்வு அடிக்கடி உண்டாகும். குடும்ப சூழ்நிலைகளில் புதிய மாற்றங்கள் தென்படும். உங்கள் மன உறுதியை மேம்படுத்த ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடவும். 
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பது அவ்வளவு உசிதமானது அல்ல. வியாபாரிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சில பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கால்நடைகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். 
அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பேச்சில் கவனம் தேவை. கலைத்துறையினர் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடவும். மனதில் புதிய நம்பிக்கை பளிச்சிடும். பெண்மணிகள் கணவருடன் கலந்தாலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியிலும், விளையாட்டிலும் ஈடுபடுவீர்கள். சோம்பேறித்தனம் இன்றி யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சியில் ஈடுபடவும்.
பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

***
சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம்  முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் திறமை பளிச்சிடும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை விலகும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தாற்போல் விளைபொருளை விற்று லாபம் அடைவீர்கள். கால்நடைகளாலும் லாபம் கிடைக்கும். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பேசும்பொழுது கவனமாக இருங்கள். உங்கள் செல்வாக்கில் சற்று குறைபாடுகள் உண்டாகும். கலைத்துறையினருக்குத் தகுந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். மன உளைச்சலில் இருந்து விடுபட யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் போட்டியும், பொறாமையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவமணிகள் மிகுந்த அக்கறையுடன் படித்து முன்னேறுவீர்கள். 
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

***

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதைக்கு எந்தக் குறையும் ஏற்படாது. வீண் விரயங்களைச் சந்திக்க நேரிடும். மனதில் தோன்றும் கவலைகளால் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்ளுங்கள்.  
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலைச்சலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக முதலீடு செய்யாமல் சிக்கனமாக செயல்பட்டு லாபமடைவீர்கள். கடின உழைப்பே மூலதனமாக இருக்கும். விவசாயிகளுக்கு லாபம் குறைவாகவே இருந்தாலும் மகசூல் அதிகரித்துக் காணப்படும். கால்நடைகளாலும் செலவுகள் கூடும். 
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். உங்கள்  செல்வாக்குக்கு குறை ஏற்படாது. கலைத்துறையினருக்கு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் சுமாராகவே வரும். பெண்மணிகளுக்கு மழலைகள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். குறை கூறாமல் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. நண்பர்களுடன் அளவோடு பழகுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 13. சந்திராஷ்டமம்: இல்லை.
***

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்லபடியாக வெற்றி பெறும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் உங்களை வந்து வரும். சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும்.  
உத்தியோகஸ்தர்கள் இயந்திர சம்பந்தமான பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் முயற்சிகள் கடினமான உழைப்பால் வெற்றி பெறும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். மிகவும் ஜாக்கிரதையாகவும், பாதுகாப்புடனும் பிரயாணத்தை மேற்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு விளைபொருள்களால் ஓரளவு லாபமே உண்டாகும். நீர்வரத்து உயரும். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். செல்வாக்கில் சிறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரிடம் சக கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் வரவும் செலவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். கணவர் வீட்டாருடன் புரிதல் மேம்படும். மாணவமணிகள் ஆசிரியர்களின் அறிவுரையை மதித்து நடக்கவும். மிகுந்த சிரமத்துடன் பாடங்களைப் படித்து வெற்றி பெற 
வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 06, 08. சந்திராஷ்டமம்: இல்லை.
***
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல்  அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பதால் குழப்பங்கள் உண்டாகும்.  
உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். எதிர்பார்த்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தொழில் விருத்தியடையும். விவசாயிகளுக்கு பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபம் உண்டாகும். 
அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிறர் கூறும் ஆலோசனைகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். கலைத்துறையினர் மனதில் புதுவிதமான தீர்மானம் செய்வீர்கள். செய்யும் காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழக வேண்டும்.
பரிகாரம்: குல தெய்வ வழிபாடு அவசியம். அனுகூலமான தினங்கள்: 11, 14. சந்திராஷ்டமம்: 09, 10.
***
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)
இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர் செல்ல நேரிடலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்துகொண்டே போகும்.  
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கூடுதல் நிதியுதவி கிடைக்கும். வியாபாரிகள் அவசியமான பொருள்களை மட்டும் வாங்கி வியாபாரம் செய்யுங்கள். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் வேண்டாம். விவசாயிகள் அதிக உழைப்பைக் கொடுத்து விவசாயத்தை நன்கு செழிக்கச் செய்வீர்கள்.  
அரசியல்வாதிகளுக்கு புதுப்புது உத்தரவுகள் மேலிடத்திடம் இருந்து வரும். அடிக்கடி வெளியூர்களுக்கு பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு காரியங்கள் யாவும் இழுபறியாகவே இருக்கும். கடின முயற்சிக்கேற்ப முன்னேற்றம் அடைவீர்கள். பெண்மணிகளுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மாணவமணிகள் முன்னேற்றத்துக்கான முயற்சிகளை கூட்டிக் கொள்ளுங்கள். சிறந்ததொரு மாற்றத்தைக் காண்பீர்கள். 
பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: 11, 12.
***

மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் நேரிடும். பயணங்களின்போது பாதுகாப்பு தேவை. பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் கால தாமதம் ஏற்படும்.  தேவையான ஆவணங்களின் மீது கவனம் தேவை. 
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான குறைபாடுகள் நிவர்த்தி ஆகும். வியாபாரிகள் பொருள்கள் வாங்குவது, வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான செயல்கள் மேம்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 
அரசியல்வாதிகள் பிறருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு திண்டாட வேண்டாம். எதையும் யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெண்மணிகளுக்கு வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மாணவமணிகள் தங்களுக்குப் பிடித்த நண்பர்களின் வருகையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 12, 15. சந்திராஷ்டமம்: 13, 14.
***
கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மூத்த உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதமாக அமையும். பண வரவு தொடர்பாக எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். 
 உத்தியோகஸ்தர்களுக்கு சில விஷயங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் சில நிறைவேறும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு உங்கள் பணிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும். லாபங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. 
அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கலைத்துறையினருக்கு மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் அகலும். வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்மணி
களுக்கு குழந்தைகள் விஷயங்களில் சற்று கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் கல்வி தொடர்பான விஷயங்களில் சக மாணவர்களின் உதவியுடன் செயல்படுவீர்கள். சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 14. சந்திராஷ்டமம்: 15.
***
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வீடு மற்றும் வாகன யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிறைய பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் எதிர்பாராத சில உதவிகளை நண்பர்கள் மூலம் பெறுவீர்கள். பிரயாணம் செய்யும்போது சற்று விழிப்புடன் இருக்கவும். விவசாயிகளுக்கு இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்ல படியாக முடியும். முயற்சிக்கேற்ப 
முன்னேற்றம் அமையும். 
அரசியல்வாதிகளுக்கு மிகுந்த பிரயாணத்தினால் உடல் சோர்வும், மனச்சோர்வும் ஏற்படும். கலைத்துறை
யினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவது சற்று தாமதமாகும். சக கலைஞர்களுடன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பெண்மணிகள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மாணவமணிகள் விளையாட்டுத் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் ஈடுபடவும். நண்பர்களிடம் பழகும்போது பேச்சு வார்த்தைகளில் தேவை.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

***
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com