இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
செய்யும் தொழிலில் கவனத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்த்து படிக்கற்களாக மாற்றி வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வர வேண்டிய தொகை சிறிது சிறிதாக வந்துவிடும்.
உத்யோகஸ்தர்களுக்கு சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் பொருளாதாரத்தைப் பெருக்க முற்படுவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். விவசாயத் தொழில் ரீதியான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். எதையும் செய்து தப்பிக்க முடியும் என்று கனவு காணாதீர்கள். கலைத்துறையினர் கடன் நிமித்தமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வரவு மேம்படும்.
பெண்மணிகள் தங்களின் உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மாணவமணிகள் தங்களது நண்பர்களோடு சேர்ந்து சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 22, 23 சந்திராஷ்டமம்: இல்லை
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும்.
உத்யோகஸ்தர்கள் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வியாபாரிகள் பழைய கடன்களை அடைத்து புதிய கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். விவசாயிகளின் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் கிட்டும். கால்நடைகளால் லாபம் உயரும். மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மருத்துவச் செலவு குறையும். அலைச்சல் அதிகமானாலும் ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிரிகள் விலகுவார்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
பெண்மணிகள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தொகையைச் செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வரலாம்.
மாணவர்களுக்கு நிதானமும், பொறுமையும் அவசியம். எதிர்மறை சொற்களையும், எண்ணங்களையும் தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: நந்தி தேவரை பிரதோஷ நேரத்தில் வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 23, 25 சந்திராஷ்டமம்: 22
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
வருமானம் உயரும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். உடல் நலம், மன நலம் சீராகி உற்சாகப்படுத்தும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவதிலும் ஆபரணங்கள் வாங்குவதிலும் ஆர்வம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள், உத்யோக மாற்றம், போன்றவை ஏற்படலாம். வியாபாரிகளுக்கு சரிந்து கிடந்த பொருளாதாரம் தற்போது சகஜநிலைக்கு திரும்பி லாபம் கிட்டும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட நிரந்தர வருவாய் வருவதற்கான வழியை அமைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் எதிரிகளையும் தங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியும் கைகூடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் அடுக்கடுக்காக பொருளாதார சுபிட்சம் ஏற்படும்.
பெண்மணிகளின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள் மாணவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் விதமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவீர்கள். நினைத்தபடி கல்வி கற்க வெளிநாடு செல்ல ஆயத்தமாவீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 22, 25 சந்திராஷ்டமம்: 23, 24
கடகம்(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்ப முன்னேற்றம் கூடும். ஒற்றுமை பலப்படும். சுப காரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை.
உத்யோகஸ்தர்கள் மாற்றம் ஒன்றே வழி என்று மாற்றத்தை விரும்பி ஏற்பீர்கள். மேலதிகாரிகளிடம் பேசும் பொழுது மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு கடன் சுமை சற்று குறையும். தொழிலை மேம்படுத்த தற்போது காலம் கனிந்து வரும். விவசாயிகளுக்கு கண்ணியமிக்க கூட்டாளிகளினால் லாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த மந்தநிலைமை மாறும்.
அரசியல்வாதிகள் புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மேலிடத்தின் ஆதரவினால் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். உணர்ச்சி வசப்பட்டு பேசுவதைத் தவிர்த்து விடுங்கள்.
பெண்மணிகள் குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் மேல் ஒரு பார்வை வையுங்கள். மாணவமணிகள் விடியற்காலை வேளையிலேயே எழுந்திருந்து பாடம் மனப்பாடம் செய்வது உத்தமம்.
பரிகாரம்: சனிக்கிழமை அனுமனை வணங்கி வாருங்கள். அனுகூலமான தினங்கள்: 23, 27 சந்திராஷ்டமம்: 25, 26
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அடகு நகைகளை மீட்டெடுப்பீர்கள். உத்யோக மாற்றம் ஏற்படலாம். வாங்கிய கடனில் சிறியதாக அடைந்துவிடும். சுப காரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் பலன் தரும். விவசாயிகளுக்கு பொற்காலமாக அமையும். விளைச்சல் அதிகமாகி லாபம் கூடப் பெறுவீர்கள். குத்தகை நிலங்களை மீட்டெடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். மேலிடத்தின் கெடுபிடியைச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் அன்பு மாறாமல் இருக்க தங்களால் முடிந்த நலத் திட்டங்களை செய்து வாருங்கள்.
பெண்மணிகள் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். குழந்தைகளினால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமல் இருக்க மனதை ஒருநிலைப்படுத்தி தியானம், பிராணாயாமம் மேற்கொள்க. விளையாட்டில் ஆர்வத்தை கூட்டிக் கொள்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ லக்ஷிமி நரசிம்மரை தியானம் செய்யுங்கள். அனுகூலமான தினங்கள்: 24, 26 சந்திராஷ்டமம்: 27, 28
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களை தைரியமாகப் புதுப்பிக்கத் தயாராவீர்கள். பொருளாதாரம் உயர்ந்தாலும் செலவினங்களும் கட்டுக்கடங்காமல் இருக்கும். பூர்வீகச் சொத்துகளிலிருந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களினால் கலகங்கள், குழப்பங்கள் ஏற்படும். இருப்பினும் மேலதிகாரிகளின் ஆதரவுடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை நல்ல தரமான நிலைக்கு கொண்டு சென்று வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை லாபமும் அடைவீர்கள். விவசாயிகளுக்குப் பால் வியாபாரம் மிகுந்த லாபம் ஈட்டித்தரும். தானிய உற்பத்தியில் மகிழ்ச்சிகரமான நிறைவு உண்டாகும்.
அரசியல்வாதிகள் எதிரிகளின் மீது கண் வைப்பதோடு கவனமாகப் பழகவும். எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் காண்பீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள். ரசிகர்களை கெüரவப்படுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ பலம் கூடும. மாணவமணிகள் தங்களது நண்பர்களால் சில தொந்தரவுகளைச் சந்திப்பீர்கள். மூத்தோர் சொற்கேட்டு நடக்கவும்.
பரிகாரம்: சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 23, 27 சந்திராஷ்டமம்: இல்லை
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
சமுதாயத்தில் உங்களுக்கு புதிய கெüரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்குச் சமர்பித்து, பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிக் கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள் சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளைத் தீவிரமாகச் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளை தவிர்த்து தனியே வியாபாரம் மேற்கொள்வது நன்மை பயக்கும். விவசாயிகள் பாசன வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளினால் விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் அன்பைப் பெற்று சாதகமாக்கிக் கொள்வீர்கள். புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்களது நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். பண வரவு பெருகும்.
பெண்மணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி யோகா, பிராணாயாமம் மேற்கொள்ளுங்கள். ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். மாணவமணிகள் மாநில அளவில் சாதிக்கும் பலனை ஏற்படுத்திக் கொள்வார்கள். விளையாட்டிலும் சாதிக்கத் துடித்து கடுமையான பயிற்சியை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கி கந்தர் அனுபூதியை துதியுங்கள். அனுகூலமான தினங்கள்: 22, 28 சந்திராஷ்டமம்: இல்லை
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பங்காளி வழிகளில் தொந்தரவு கொடுப்போரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பணம் சேர்ந்தாலும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். திட்டங்களை முறைப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உத்யோகஸ்தர்கள் தங்களது மேலதிகாரிகளின் சொற்படி நடந்து கொள்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் வருமானமும் வரும். வியாபாரிகள் அதிக முதலீடுகளைச் செய்து கஷ்டப்படாமல் இருப்பதை கொண்டு லாபமீட்டுவீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகி லாபம் உயரும். இல்லத்தில் மழலைச் செல்வங்களின் வரலால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிலர், நண்பர்களைப் போலே பழகி உங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள். கலைத்துறையினர் புகழுக்கும், பாராட்டுதல்களுக்கும் தகுதியானவராக இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் விருதுகள் தள்ளிப்போகும். பெண்மணிகள் ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்.
குதூகலத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் தங்களது நண்பர்களோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆசிரியர்களே வியக்குமளவிற்கு காரியமாற்றுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வ பிரார்த்தனை உகந்தது. அனுகூலமான தினங்கள்: 26, 28 சந்திராஷ்டமம்: இல்லை
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பற்றாக்குறையில்லாமல் பணத்தேவை பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். உயர்ந்தோரின் நட்பு கிடைத்து சிறப்பான வாழ்க்கை அமையும்.
உத்யோகஸ்தர்களுக்கு தலைமைப் பதவிகள் தானாகத் தேடிவரலாம். உங்கள் வேலைப் பளுவைத் தீர்க்க பக்கபலமாய் உயரதிகாரிகள் வந்திணைவர்.
வியாபாரிகளுக்கு நலிந்துள்ள நிலையிலிருந்த தொழில் தானாகவே சீராகும். உடன்பிறப்புகள் உதவுவார்கள். விவசாயிகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். நவீன உபகரணங்களின் உதவியால் விவசாயத்தில் புரட்சி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய ஒப்பந்தங்களை தொண்டர்களின் உதவியுடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
வெளிநாட்டு ரசிகர்களால் உங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பெண்மணிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் சாதகமாகும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மாணவமணிக பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தருவீர்கள். உணவு பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்து உடல்நலத்தைக் காத்துக் கொண்டால் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 27, 28 சந்திராஷ்டமம்: இல்லை
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
வீடு, இடம் வாங்கும் யோகம் எளிதில் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். கடன் சுமை குறையும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்த மனக்கசப்பு மாறும். வியாபாரிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
வியாபாரம் வெற்றி நடைபோடும். விவசாயிகளின் செயல்களில் வெற்றி கிடைக்கும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கால்நடைகளால் லாபம் உயரும்.
அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். கலைத்துறையினருக்கு பிரிந்து சென்ற சக கலைஞர்கள் மீண்டும் வந்து இணைவர். பயணங்கள் அதிகரிக்கும்.
பெண்மணிகளுக்கு வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் மூலம் அனுகூலமான தகவல் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு நல்ல காரியங்கள் பலவும் படிப்படியாக நடைபெறும். விருந்தாளிகளால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகளுக்கு படிப்பிற்கேற்ற உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகள் படிப்படியாக மாறும்.
பரிகாரம்: காலபைரவரை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 25, 27 சந்திராஷ்டமம்: இல்லை
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். நினைக்க இயலாத அளவிற்கு யோகங்கள் கிடைத்து தொழில் மேம்படும். அசையாச் சொத்துகளும், வாகனங்களும் வாங்க முயற்சிப்பீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் தானாகவே தேடி வரும். எவரிடமும் உங்கள் விஷயங்களை வெளிப்படையாகக் கூறாதீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பன்மடங்கு உயரும். புதிய பாதை புலப்படும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகி லாபம் உயரும். குத்தகை நிலங்களை மீட்டெடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள், மேலிடத்து அதிகாரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். மிதமிஞ்சிய பொருளாதார வளம் உண்டாகும். கலைத்துறையினருக்கு அதிகாரப் பதவி தேடி வரலாம். மறக்க முடியாத பல சம்பவங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்மணிகளுக்கு அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகளால் மருத்துவச் செலவுகளாலும் சேமிப்பு கரையும்.
சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமணிகள் விடியற்காலை வேளையிலேயே எழுந்திருந்து பாடங்களை மனப்பாடம் செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்த்தைவிட கூடுதலாகவே மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை, விநாயகர் வழிபாடு அவசியம். அனுகூலமான தினங்கள்: 22, 26 சந்திராஷ்டமம்: இல்லை
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உங்கள் திட்டங்களை முறைப்படுத்தி வாழ்வில் முன்னேறுவீர்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். பெற்றோர் வழியில் சொத்துகள் சேரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் நிலுவைத் தொகைகள் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். பதவி உயர்வுடன் கூடிய பணியிடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் திறமையான பணியாளர்களால் வியாபாரம் விருத்தியாகும். சுயதொழிலில் வருமானம் கூடும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கூடும். உபுதுப்புது நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை நவீனமாக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் நிதானம் தேவை. கலைத்துறையினர் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். அனைவருடனும் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
பெண்மணிகள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். அசையாச் சொத்துகள் சேரும். பொருளாதார விருத்தி ஏற்படும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். கவனத்துடன் தினமும் யோகா, பிராணாயாமம் மேற்கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ஹயக்கிரீவரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 24, 28 சந்திராஷ்டமம்: இல்லை