இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும்
இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும்

இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும்: வாரப்பலன்கள்

வரம் தரும் வாரம்: வாரப் பலன்கள் (23.12.2022 முதல் 29.12.2022 வரை) இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

வரம் தரும் வாரம்: வாரப் பலன்கள் (23.12.2022 முதல் 29.12.2022 வரை) இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம்
கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத் துடன் பங்கேற்பீர்கள். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  புதியவர்களுடன் இயல்பாய் நடந்துகொள்வீர்கள். புகழ்  உயரும்.  உத்தியோகஸ்தர்கள் புதிய பணிக்கு முயற்சி எடுப்பார்கள். வியாபாரிகள் கறாராகப் பேசி வியாபாரம் செய்வார்கள். விவசாயிகளுக்கு பூச்சித் தொல்லை இருக்காது.  அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. பெண்களின் இல்லம் தேடி உறவினர்கள் வருவார்கள். மாணவர்கள் புதிய வளர்ச்சியைக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

ரிஷபம்
அந்தஸ்தான பதவிகள் தேடி வரும். குறிக்கோளை விரைவாக எட்டுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டு.   பயணம் மேற்கொண்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.   வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கல்  சுமாராகவே இருக்கும். விவசாயிகளின் விளைச்சல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு அநாவசிய சிந்தனை வேண்டாம்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கைகூடும்.  பெண்களுக்கு வருவாய் கிடைக்கும். மாணவர்கள் வெற்றிக்குத் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம்- 23,24.

மிதுனம்
தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.  சொத்துகளை வாங்குவீர்கள்.  குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள்.  வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைப்பார்கள்.  அரசியல்வாதிகளின் பேச்சுக்கு கட்சி மேலிடத்தில் மதிப்பு உண்டாகும். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் உடல் நலத்தைக் காப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- 25,26.

கடகம்   
முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்குடனும் காணப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.  சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வீர்கள்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். விவசாயிகள் பிறரிடம் நற்பெயரை எடுப்பார்கள்.  கலைத்துறையினருக்கு உடன்பணிபுரிவோர் ஆதரவு அளிப்பார்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் ஒருமித்த மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
சந்திராஷ்டமம்-27,28.

சிம்மம்
பிறர் தேவையறிந்து உதவிகளைச் செய்வார்கள். தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வீர்கள்.  பெற்றோரும் அனுசரணையாக இருப்பார்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.  விவசாயிகள் விளைச்சலில் சிறிது சிக்கல் உருவாகலாம். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் செயல்படுத்துவார்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களை கணவர் புரிந்துகொள்வார். மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்வர்.
சந்திராஷ்டமம்-29.

கன்னி
உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனச்சோர்வு நீங்கும்.   உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சிறு குழப்பம் ஏற்படும். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைப்படி நடப்பார்கள். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் வருவாய் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர் துணிவுடன் கஷ்டமான ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்களின் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் பெற்றோரின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

துலாம்
தொழிலில் உயர்நிலையை அடைவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய உத்தியுடன் எதிரிகளின் செயல்களை முறியடிப்பீர்கள்.  சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் தேவையறிந்து உதவி செய்வார்கள்.  வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில் வளர்ச்சியைக் காண்பார்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.  அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் யோகா கற்று கொள்வார்கள். மாணவர்கள் விரும்பியது நடக்கும்.
சந்திராஷ்டமம்- இல்லை.

விருச்சிகம்
குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரும் நட்பு பாராட்டுவார்கள்.  செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து நடக்கவும்.  வியாபாரிகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.  விவசாயிகள் கால்நடைகளால் வருவாய் உயரக் காண்பார்கள்.  அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவுவார்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டுவார்கள். மாணவர்கள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்- இல்லை.

தனுசு
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தன்னம்பிக்கையும் நிர்வாகத் திறனும் அதிகரிக்கும்.  அரசு  வழியில் சலுகைகள் கிடைக்கும்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் தேவையான பாதுகாப்பைத் தருவார்கள்.  வியாபாரிகள் வெளியூர் பயணங்களால் நன்மை அடைவார்கள்.  விவசாயிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் வந்து சேரும்.  கலைத்துறையினர் ரசிகர்களை ஊக்கப்படுத்துவார்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பூர்வீக சொத்துகளில் பிரச்னைகள் நீங்கும்.  நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.  மருத்துவச் செலவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் நன்கு உழைப்பார்கள். வியாபாரிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும்.  விவசாயிகளின் முயற்சிகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகள் தொடங்கிய பணிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும்.  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் படிப்படியாக உயரும். பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.

கும்பம்
புத்திக் கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நற்செயல்களைச் செய்வீர்கள்.  வெளிநாட்டிலிருந்து நற்செய்தி வந்து சேரும். பிறரின் தவறுகளை மன்னிப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் முழுமையாகப் பணியாற்றுவார்கள்.  வியாபாரிகளுக்குப் போட்டியாளர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள்.  விவசாயிகள் கிணறு வெட்டி பாசன வசதிகளைப் பெருக்குவார்கள்.  அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள்.  கலைத்துறையினரின் புகழ் அதிகரிக்கும். பெண்கள் கவனமாக இருப்பார்கள். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் மிகும்.
சந்திராஷ்டமம்-இல்லை.

மீனம்
பெருந்தன்மையுடன் நடப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.  நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அரசாங்கத்திலும் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.  விவசாயிகளுக்கு கொள்முதலில் வருவாய் கிடைக்கும். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினரின் உழைப்பு வீண்போகாது. பெண்கள் பிறரிடம் சுமுகமாகப் பழகவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com