திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு (வாரப் பலன்கள்)

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரையிலான வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு (வாரப் பலன்கள்)

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரையிலான வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும் நேரமிது. எதிர்ப்புகள் குறையும். தொலைதூரத் தொடர்பு பயனுள்ளதாக அமையும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் பயணத்தின்போது பாதுகாப்புடன் இருக்கவும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாகும். மனச்சோர்வு உண்டானாலும் சக ஊழியர்களின் ஆதரவுடன் சமாளித்துவிடுவீர்கள். 

வியாபாரிகள் அயல்நாட்டுத் தொடர்புகளால் அபிவிருத்தி காண்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் மாற்றுப் பயிர்களின் மூலம் லாபம் காண்பீர்கள். கால்நடைகளாலும் மிகுந்த லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் எந்த காரியத்திலும் நிதானமாக ஈடுபடவும். புதியவர்களுடன் விழிப்புடன்  பழகவும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடல்நிலையில் கவனம் தேவை. பெண்மணிகளுக்கு புதிய சொத்துக்களும், பொருள்களும் சேரும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக செயல்படவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு திறமைகள் பளிச்சிடும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்: 28.


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

காலத்தால் செய்த நன்றி கை கொடுக்கும் நேரமிது. நல்லவர்கள் உங்களுக்கு தானாக உதவ முன்வருவார்கள். புனித காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன மகிழ்ச்சி பெருகும். சுகம் கூடும். புதிய சொத்துக்களும், பொருள்களும் சேரும். 

உத்தியோகஸ்தர்கள் சந்தித்து வந்த பிரச்னைகளுக்கு தற்காலிக தீர்வு கிட்டும். கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆதாயம் பெருகும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் அதிக லாபம் காண்பீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். 

அரசியல்வாதிகள் எதிர்பாராத புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினர் எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமூகமாக நிறைவேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்மணிகள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்தவும். மாணவமணிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆசிரியர், பெற்றோரின் ஆதரவினால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 31. 

சந்திராஷ்டமம்: 29, 30.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும் நேரமிது. விளையாட்டு விநோதங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 
உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறமை வெளிப்படும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். திறமைக்கு உரிய பலன்கள் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இயந்திரம் சம்பந்தமான பணிகள் லாபம் தரும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவீர்கள். மகசூல் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எடுத்த காரியங்களைத் திருப்தியுடன் முடித்து விடுவீர்கள். மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு திறமைகள் வெளிப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விருதுகள் கிடைக்கும். 

பெண்மணிகள் மனதில் தைரியம் கூடும். உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலையில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 02. 

சந்திராஷ்டமம்: 31, 01.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலை திருப்தி அளிக்கும் நேரமிது. உயர்ந்த லட்சியத்தை அடைய பாடுபடுவீர்கள். சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். பயணத்தால் நன்மை உண்டாகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் நலம் அடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். பலவித சிரமங்களுக்கு நடுவிலும் அமைதியைக் கடைப்பிடியுங்கள். வியாபாரிகள் பொறுமையுடன் பல பிரச்னைகளைக் கடக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளிடம் சுமூகமான உறவில் இருக்கவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சக விவசாயிகளால் உதவிகளைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கட்சி மேலிடம் உங்களை கெüரவப்படுத்தும். கலைத்துறையினர் வியக்கத் தகுந்த வகையில் முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார வசதி கூடும். 

பெண்மணிகள் கணவரிடம் அதிக அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பற்றும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 31, 01. 

சந்திராஷ்டமம்: 02, 03.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் பெருந்தன்மையான குணங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் நேரமிது. உங்களின் ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக் கொள்வீர்கள். உயர்ந்த பண்புகள் வெளிப்படும். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சில இடையூறுகள் ஏற்பட்டாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். வியாபாரிகள் தரமான பொருள்களின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை குறையும். விவசாயிகள் கால்நடைகளால் அதிக லாபம் பெறுவீர்கள். காவல் தெய்வங்களுக்கு வழிபாடுகளை நடத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் இழந்த ஒப்பந்தங்களை மீண்டும் பெறுவீர்கள். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கைகொடுக்கும். 

பெண்மணிகள் கலகலப்புடன் குடும்ப நிர்வாகத்தை நடத்திச் செல்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். மாணவமணிகள் பெரியோர்களை மதித்து நடக்கவும். கல்வியில் போதிய கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உறவுக்கு கைகொடுப்போம் என்கிற நிலை உருவாகும் நேரமிது. எல்லா தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சில இடையூறுகள் ஏற்படும். பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய உத்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பழைய பாக்கிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். மாற்றுப் பயிர்களால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பீர்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். 

பெண்மணிகளுக்கு ஆடம்பரமான பொருள்கள் வந்து சேரும். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு உண்டாகும். மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணவரவுக்கு வாய்ப்புகள் உருவாகும் நேரமிது. மறைமுக எதிரிகளால் சிறு பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். பழைய கடன்கள் தீரும். நெடுநாளாக இருந்து வந்த நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க முயற்சிக்காதீர்கள். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் நல்ல லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பேச்சுவார்த்தைகளின் போது நாவடக்கம் அவசியம். யாரையும் நம்பி ரகசியங்களைப் பகிராதீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து வருமானத்திற்கு வழிவகுக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 

பெண்மணிகள் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று கஷ்டமான சூழ்நிலையைக் கடந்து விடுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். விளையாட்டில் முதலிடம் பெற்று விளங்குவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம்  காணும் நேரமிது.  தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது பாதுகாப்புடன் செல்லவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சற்றுத் தள்ளிப் போகும். சக ஊழியர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் அமைதி காப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சற்று சிரமம் உண்டாகும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். கால்நடைகளால் அதிக லாபம் 
உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். உங்கள் எதிரிகளும் நண்பர்களாவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. சக கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்மணிகள் மனதில் தைரியத்தை இழக்க வேண்டாம். பெரியவர்களின் ஆசியுடன் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமணிகள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு சாதனைகளைச் செய்வீர்கள். பெற்றோர், ஆசிரியர் பேச்சை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 28, 02.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடைய உதவிகள் கிடைக்கும் நேரமிது. செய்தொழிலில் கணக்கு வழக்குகளை சரிவர கவனித்துக் கொள்ளுங்கள். எடுத்த காரியங்களைத் தள்ளிப் போடாமல் செய்து முடிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு கடினமான பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அலுவலகச் சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். செல்வந்தர்களின் உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறிய தடைகளை மீறி வெற்றி பெறும். கால்நடைகளால் செலவு அதிகரித்தாலும் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். ரகசியத் திட்டங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். பயணங்களின் போது பாதுகாப்பு அவசியம். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மாணவமணிகளின் வருங்கால கனவுகள் நிறைவேற அறிகுறிகள் தென்படும். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 01, 03. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும் நேரமிது. கோபத்தை விடுத்து மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். தீயவர்களின் நட்பை விலக்கி விடுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனத்துடன் நடந்துகொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிரமம் ஏற்படும். மற்றபடி கடையை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். விவசாயிகள் புதுப் புது குத்தகைகளை எடுத்து சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். விளைச்சல் பெருகி லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கட்சி மேலிடத்திலிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் நல்லபடியாக அமையும். சக கலைஞர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். மாணவமணிகள் ஞாபக  சக்தியை மேம்படுத்த அதிகாலையில் எழுந்து படிக்கவும். உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சிவன், பார்வதிதேவியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 01. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செய் தொழிலில் லாபம் அதிகரிக்கும் நேரமிது. பொருளாதார நிலை உயரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி அனைவரிடமும் இணக்கமாகப் பழகவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டு சேர்ந்து தொழில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று லாபம் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதி அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகளால் சில தொல்லைகள் உருவாகும். கட்சி மேலிடத்தின் ஆதரவால் அனைத்தையும் சமாளித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்மணிகள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். 

மாணவமணிகள் பெற்றோர் அறிவுரையின்படி நடக்கவும். உடல் நலம் பேண யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 03.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நல்லவர்களின் நட்பும் உதவியும் கிட்டும் நேரமிது. எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காண்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். மேலதிகாரிகளின் பேச்சை மதித்து நடப்பீர்கள். வியாபாரிகள் தடைகளைத் தாண்டி பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளிடம் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் காண்பீர்கள். கால்நடைகளின் மீது தனி கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகள் மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பண உதவி, பொருளுதவி அதிகம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அரவணைத்துச் செல்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: நவகிரக வழிபாடு உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 30, 03. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com