நிகழ்வுகள்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மலையடிப்பட்டி ஸ்ரீகமலவல்லி சமேத ஸ்ரீகண்நிறைந்த பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேக உத்ஸவம்....


ஜேஷ்டாபிஷேக உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மலையடிப்பட்டி ஸ்ரீகமலவல்லி சமேத ஸ்ரீகண்நிறைந்த பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேக உத்ஸவம், திருப்பாவாடை உத்ஸவம் ஜூலை 11}இல் (திங்கள்கிழமை)  நடைபெறுகின்றன.  தொடர்புக்கு  - 9361179673.

கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கூறத்தாங்குடியில்  குங்குமவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ எமஸம்ஹாரேஸ்வரர் கோயிலிலும்,  லட்சுமி நாராயணப் பெருமாள் அருமருந்து ஆஞ்சநேயர் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷண வைபவங்கள் ஜூலை 6-இல் நடைபெறுகின்றன. 

தொடர்புக்கு: 9600139434, 9840053289.

திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் உள்ள பாடல் பெற்ற  தேவாரத் திருத்தலமான  திரிபுர சுந்தரி உடனமர் திரிபுராந்தக சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 6 காலை 6}7.30 க்குள் நடைபெறுகிறது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஜூலை 6}ஆம் தேதி காலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது.

திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்குப்பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி,  ஜூலை 6}இல் திருக்குட முழுக்குடன் நிறைவுறுகின்றது. 
தொடர்புக்கு: 0431 } 2761869.

தேர்த் திருவிழா
இஸ்கான் சென்னை சார்பில் ஸ்ரீ ஜகந்நாதரின் 39-ஆவது தேர்த்திருவிழா ஜூலை 3}இல் நடைபெறுகின்றது.   அன்று மாலை 3 மணி அளவில் அண்ணா நகர் 3}ஆவது அவென்யூவிலிருந்து புறப்பட்டு, மாலை 7 மணி அளவில் பாடி மேம்பாலம் அருகில் உள்ள திருமால் திருமகள் வசந்த மண்டபத்தை அடைகின்றது. 

தொடர்புக்கு: 044 - 24530921/23.

மாணிக்கவாசகர் குரு பூஜை
சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஆத்ம நாதர் பர்ணசாலை (கோயில்)யில் மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூலை 3-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவாசகம் முற்றோதல், அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும். 
தொடர்புக்கு: 9443112098.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் ஜூலை 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு. 
தொடர்புக்கு:  9444887769.

உழவாரப்பணி
சென்னை அண்ணாமலையார் அறப்பணிக் குழு சார்பில் மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மருதாடு கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புன்னை கிராமத்தில் மண் மூடிய நிலையில் புதைந்துள்ள சிவன் கோயிலில் ஜூலை 3-இல் உழவாரப்பணி நடைபெறுகின்றது.  

தொடர்புக்கு -  9884577557. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com