கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், திருக்குவளை தாலுகாவில் மாவூர் } சாட்டியக்குடி வழியில் தெற்குப்பனையூர் கிராமத்தில் உள்ள இரட்டை லிங்கங்கள் என்ற சிறப்புடன் திகழும் வரம் தரும் நாயகி சமேத ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமி, சிவப்பிரியா சமேத தான் தோன்றீஸ்வரர் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 11}ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9840053289.
ஸ்ரீ வேதவியாசர் ஜயந்தி
சேலம் சின்னத் திருப்பதியில் ஸ்ரீ பாலாதேவஸ்தானம் ஸ்ரீமஹா பெரியவா இல்லத்தில் ஸ்ரீவேதவியாசர் ஜெயந்தி ஜூலை 13}ஆம் தேதி சிறப்பு ஹோமம், சகஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை முதலிய வைபவங்களுடன் நடத்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா மூலம் ஏற்பாடு
ஆகியுள்ளது.
தொடர்புக்கு: 9442191793, 8838911220.
ஸ்ரீ வியாஸ பூர்ணிமா ரதோத்ஸவம்
சென்னை செம்பாக்கம் காமராஜபுரம் களத்து மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ வேதவ்யாஸர் தபோவனத்தில் ஜூலை 13}ஆம் தேதி வ்யாஸ பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ வேதவியாசர் சந்நிதியில் காலை 6 மணி அளவில் மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை வழிபாடும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 9444508247.
சுகபிரம்ம மகரிஷி ஜயந்தி
ஸ்ரீ வேதவியாசர் புத்திரனாக ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி. அவருடைய ஜெயந்தி விழா தென்னகத்தில் மூன்று இடங்களிலும் ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு ஹோமம், பூஜைகள், அபிஷேகம் அலங்கார ஆராதனைகளுடன் ஸ்ரீ குமார் குருஜியின் அனுக்கிரகத்தால் நடைபெறுகிறது.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி ஆஸ்ரம வளாகம் - தியாகராயநகர் - தெற்கு உஸ்மான் சாலையில் பேருந்து நிலையம்
அருகில் உள்ள தாமோதரன் தெரு } அனுக்ரஹா பில்டிங்.
தொடர்புக்கு: 9444383960.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அருட் பீடம் - கடலூர் மாவட்டம், திருவகீந்தபுரம் பில்லாலி தொட்டி அருகில் சொர்ண வெங்கடேச பெருமாள் ஆலயம்.
தொடர்புக்கு: 9487139059.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி சந்நிதி - சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், தெத்திகிரிபட்டி, அகத்திய நகரில் உள்ள அபய ஆஞ்சநேயர் கோயில்.
தொடர்புக்கு: 9790751803.
ஸம்வத்ஸ்ராபிஷேகம்
பூந்தமல்லியிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் நயப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு நேத்ரதாயினி அம்பாள் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் ஜூலை 10}ஆம் தேதி ஐந்தாவது ஸம்வத்ஸ்ராபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9884080543.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்
சென்னை குரோம்பேட்டை நேருநகர் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் 1530வது வார சகஸ்ரநாம பாராயணம் ஜூலை 9}ஆம் தேதி ஜோதி நகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் சந்நிதியில் மாலை 6 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு: 9841498690.