இந்த ராசியினர் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது: வாரப் பலன்கள்

இந்த வாரப் (மார்ச் 11-17) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன் பெறுங்கள். 
இந்த ராசியினர் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது: வாரப் பலன்கள்

இந்த வாரப் (மார்ச் 11-17) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன் பெறுங்கள். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உற்றார், உறவினர்களினால் எந்த ஒத்துழைப்பும் பெறமாட்டீர்கள். உங்கள் எண்ணங்கள் ஈடேற பாடுபடுங்கள். பொருளாதாரம் சற்று ஏற்றம், இறக்கமாகவே இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு உடனிருக்கும் ஊழியர்களால் சில குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் வியாபார நிமித்தமாக நிறையப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அரசு ஒத்துழைப்பு கிட்டும்.விவசாயிகள் விவசாய ஆட்களை அன்புடன் அனுசரித்து வேலை வாங்குங்கள். உங்களின் மதிப்பு, கெüரவம், அந்தஸ்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் தன்னம்பிக்கையுடன் தொண்டர்களை அணுகுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுங்கள். பெண்மணிகளுக்கு எதிர்பாராத சுபச் செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத திடீர் திடீரென்று செலவுகள் உண்டாகும்.  மாணவமணிகள் சிந்தித்து செயல்படவும். சக மாணவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

திறமைகளை வெளிப்படுத்த தொடங்குவீர்கள். நண்பர்களினால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்குங்கள். அனைவரின் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நிதானமான பேச்சுகளின் மூலம் காரிய சித்தி ஏற்படும். விவசாயிகள் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். புதுப்புது குத்தகை நிலங்களால் வளர்ச்சி ஏற்படும். நீர்வரத்து அதிகமாகும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உடனிருக்கும் நலிவடைந்த கலைஞர்களின் நலத்திட்டங்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

பெண்மணிகள் பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் எதிர்பார்க்கலாம். கணவர் வீட்டாருடன் அன்னோனியம் அதிகரிக்கும். மாணவமணிகள்எதிலும் சிந்தித்து நிதானமாக காரியத்தில் ஈடுபடுங்கள். ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். படிப்பு விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: குருவாயூரப்பனை வணங்குங்கள்.
அனுகூலமான தினங்கள்: 11, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள். இன்னல்கள் நீங்கி இன்பங்கள் எட்டிப்பார்க்கும் காலமிது. மனதில் இருந்து வந்த கவலைகள் மறைந்து சந்தோஷத்துடன் உலா வருவீர்கள். சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் சற்று சாதகமான சூழல் உருவாகும். மேலதிகாரிகளால்பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் விழிப்புணர்வுடன் வியாபாரத்தை நடத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். விவசாயிகள் சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் குறையும். எதிலும் சிந்தித்து வேகமாகச் செயல்படுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு வழக்குகள் சம்பந்தமாக அலைச்சல் ஏற்படும். கலைத்துறையினருக்கு பிரச்னைகள் குறையும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். திறமைகளுக்குச் சவாலாக அமையும். 

பெண்மணிகள் சிக்கனமாக குடும்பத்தை திறமையுடன் நடத்தி சேமிப்புகள் உயர வழிவகுப்பீர்கள். விலகி இருந்தவர்கள் உடன் வந்து உறவாடுவார்கள். மாணவமணிகள் விடியற்காலை வேளைகளிலேயே எழுந்து கவனத்துடன் படிப்பீர்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

பரிகாரம்: அனுமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 12, 13. சந்திராஷ்டமம்:  இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். வெற்றி வாய்ப்புகள் கூடும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இயந்திரப் பணிகளினால் லாபமடைவீர்கள். மக்களால் நலம் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் ஈடுபடுங்கள். 

உத்யோகஸ்தர்கள் மனதில் உற்சாகம் கூடும். உடன் பணிபுரியும் உத்யோகஸ்தர்களால் சகலவித உதவிகளையும் அலுவலகத்தில் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் கெடுபிடியிலிருந்து சற்று விலகல் உண்டாகும்.  வியாபாரிகளுக்கு  இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொருளாதாரம் உயரும். விவசாயிகள் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். நீர்வரத்து அதிகமாகும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். விசேஷமாக சில பயணங்களை மேற்கொள்ள நேரிடும். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டுகளினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பெண்மணிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவி வரும். வாழ்க்கைத் துணை நலனில் கவனம் கொள்ள வேண்டும். 

மாணவமணிகள்படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் உதவி புரிவார்கள். 

பரிகாரம்: பித்ரு வழிபாடு, மகான்களைத் தரிசியுங்கள். அனுகூலமான தினங்கள்: 12, 14. சந்திராஷ்டமம்:  இல்லை.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

ஆற்றலும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு காரியமாற்றுவீர்கள். எவரிடமும் விரோதம் பாராட்டாதீர்கள். அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். 

உத்யோகஸ்தர்கள்  மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டுத் தொழிலைத் தவிர்த்திடுங்கள். கடன் குறையும். புதிய முதலீடுகளில் ஈடுபடும்போது ஜாக்கிரதையாக ஈடுபடுங்கள். விவசாயிகளுக்கு வயல், வரப்பு பிரச்னைகளில் சிறிது மனக்கசப்புகள் உறவினர்களிடையே ஏற்படும். பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள் பலவித காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உட்கட்சிப் பூசலினால் சற்று அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு பண வரவு சற்று தாமதமாகும். அநாவசியச் செலவுகளைக் குறைக்கவும்.

பெண்மணிகள்  கணவரிடம் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை வழிநடத்திச் செல்லுங்கள். குழந்தைகளினால், மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 12, 15.  சந்திராஷ்டமம்:  இல்லை

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பக்தி மார்கத்திலும், ஞான மார்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தேவையான, தெளிவான பாதை தெரியவரும். ஆன்மிக அறநிலையப் பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் இருப்பீர்கள். உடன் பணிபுரியும் அலுவலகர்களால் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரிகள் புதிய கடன்களை எவரையும் நம்பிக் கொடுக்காதீர்கள். முயற்சியை கூட்டுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரால் சில அவதூறுகளைச் சந்திப்பீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகளினால் ஜெயித்து முன்னேற்றமடைவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் அனுசரித்து நடக்கவும். கோபத்தைத் தவிருங்கள். வார்த்தைகளில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். வேற்றுமையினால் உற்றார்களைப் பகைக்க வேண்டாம். மாணவமணிகள் கல்வியில் முன்னேற, கடுமையாக உழைக்க வேண்டிவரும். 

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உகந்தது. சிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 11, 15. சந்திராஷ்டமம்: இல்லை

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். பண நடமாட்டம் சிறக்கும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சுப காரியங்கள் நிகழும் உழைப்புக்கும், திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.  

உத்யோகஸ்தர்கள் உழைப்பைக் கூட்டிக் கொள்ளுங்கள், பலனை அனுபவிக்கலாம். உங்களது கோரிக்கைகள் சில நிறைவேறும்.  வியாபாரிகள் லாபமடைவீர்கள். நேரடி மேற்பார்வையால் வியாபாரத்தைக் கவனியுங்கள். விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையாட்களால் ஒத்துழைப்பு, உழைப்பு, அனைத்தும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தன வரவு மேம்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். குழப்பங்கள் அகன்று மனதில் தெளிவு பிறக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டும். ரசிகர்களின் அன்பிற்கு கட்டுப்படுவீர்கள். 

பெண்மணிகள் ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமணிகள் வாக்கு சாதுர்யத்தால் அனைவரையும் தன் வசமாக்கிக் கொள்வீர்கள். சக மாணவர்களுக்கும் உங்களால் முடிந்த பயிற்றுவித்தலை மேற்கொண்டு அனைவருடனும் தோழமை பாராட்டி நற்பெயர் எடுப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 11, 14. சந்திராஷ்டமம்: இல்லை

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடலாரோக்கியம் மேம்படும். திட்டமிட்ட வேலைகளில் சிக்கல்கள் ஏதும் இராது. மெüனமாக இருக்கப் பழகிக் கொள்வது உத்தமம். பெற்றோர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பொருளாதார நிலைமை மேம்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு, இட மாற்றம் ஏற்படும். மனதிற்கினிய சம்பவங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து முடிவுகளைக் எடுங்கள். எதிலும் அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை மேம்படுத்துங்கள்.விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளால் மகசூல் அதிகரித்து நல்ல லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் வெற்றி, தோல்வி இலக்கைச் சமமாக பாவிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களினால் மனதில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார சிக்கல்களைச் சமாளிப்பீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கணவரின் ஆரோக்யம் மேம்படும். மாணவமணிகள் படிப்பில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். ஆசிரியர்களது அறிவுரைப்படி அனைத்தையும் பின்பற்றுங்கள்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகப் பெருமானை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 15, 16. சந்திராஷ்டமம்: 11, 12, 13

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொலைதூர செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைப் பளுவினால் ஏற்படும் அவதியால் சற்று உடல் நலம் பாதிக்கப்படலாம். சமாளித்து எழுந்து விடுவீர்கள். மேலதிகாரிகளை நம்பி எந்த விஷயத்தையும் பகிராதீர்கள். 

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்காதீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரம் பெருக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். புதிய முதலீடுகளில் ஈடுபடும்போது ஜாக்கிரதையாக ஈடுபடுங்கள். விவசாயிகளுக்கு உங்களின் விடா முயற்சியால் வெற்றிப் பாதை புலப்படும். மன உறுதி உங்களது வெற்றிக்கு வித்திடும். உங்களின் மதிப்பு, கெüரவம், அந்தஸ்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவினால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொண்டர்களுடனான புரிதல் மேம்படும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் அன்பு குறையாது. புதிய ஒப்பந்தங்களால் சில மாற்றங்கள் நிகழும். பெண்மணிகளுக்கு கணவரின் உடல்நலத்தில் கவனம் தேவை. இல்லத்தில் நிகழும் சுப காரியங்களால் கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டிவரும். மாணவமணிகள் ஞாபக சக்தி மேம்பட விடியற்காலையில் எழுந்து படித்து வாருங்கள்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 13, 16. சந்திராஷ்டமம்: 14, 15

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பதற்றப்படாமல் காரியங்களை நிதானத்துடன் செய்யுங்கள். பழைய கடன்கள் வசூலாகும். உங்களின் உயர்ந்த எண்ணங்களால் போற்றப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் செலவினங்கள் அதிகமானாலும் மகிழ்ச்சி அடைவீர்கள். 

உத்யோகஸ்தர்கள் கடமையைச் சரிவரச் செய்து பாராட்டும்படி நடப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனம் கொண்டு எதையும் பகிராதீர்கள். சிறு சிறு முயற்சிகளும் உங்களை மேன்மை நிலைக்கு அழைத்துச் செல்லும். விவசாயிகள் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் மேன்மை பெறுவீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினர் சில ஒப்பந்தங்களில் கிடைக்கப் பெற்று கையொப்பமிடுவீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும். 

பெண்மணிகள் கணவருடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களுடன்  சற்று மனக்கிலேசம் உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். மாணவமணிகளுக்கு: படிப்பில் சற்று தேக்க நிலைமை உண்டாகும். ஆசிரியர்களை அனுசரித்து படிப்பில் உதவி பெற்று அவர் சொல்படி கேட்டு நடங்கள்.

பரிகாரம்: கால பைரவரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: 16, 17

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சிந்தனைத் திறன் மேலோங்கும். நண்பர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். சினிமா, நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு புதிய முயற்சிகளில் மிகுந்த சிரமத்துடன் சற்று தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் முதலீடுகள் எதையும் செய்யாமல் நேரடி பார்வையிலேயே வியாபாரத்தைக் கவனியுங்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். திறமைகள் பளிச்சிடும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களது நோக்கம் நிறைவேறும். தொண்டர்களை அனுசரித்து அரவணையுங்கள். கலைத்துறையினருக்கு சுப பலன்கள் கூடும். எதிலும் விழிப்புடன் இருந்து காரியமாற்றுங்கள்.பெண்மணிகளுக்கு அரசாங்கத்தினரால் காரியம் கைகூடும்.

கணவரது உறவினர்களால் குழப்பங்கள், கலகங்கள் அதிகரித்து மனச்சோர்வு உண்டாகும். மெüனம் தக்க பதிலாக இருக்கக்கூடும். ஆன்மிகத் தேடல்கள் அதிகரிக்கும். மாணவமணிகள் பெற்றோர்கள் பக்க பலத்துடன் நினைத்ததை சாதிப்பீர்கள். வெளிநாடு சென்று கல்வி தொடரும் பாக்கியம் கிட்டும்.

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு பகவான் வழிபாடு மேற்கொள்ளுங்கள். அனுகூலமான தினங்கள்: 15,17.  சந்திராஷ்டமம்: இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருள் வரவு அதிகமாகும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வியாபாரம், எழுத்து, கணிதம், பத்திரிகை போன்ற துறைகளில் சுபிட்சம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு செழிப்பான சுழ்நிலை நிலவும். 

உத்யோகஸ்தர்கள் பயணத்தின் போதும், இயந்திரங்களில் பணிபுரியும் போதும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளின் வியாபார அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேறும்.

எதிலும் விழிப்புடன் காரியமாற்றுங்கள். விவசாயிகளுக்கு செய்தொழிலில் மேன்மை உண்டாகும். அரசு வழியில் சில தொல்லைகள் ஏற்படும். கூலி ஆட்களின் உழைப்பை மதித்து நடங்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளால் மனம் மகிழ்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஆசியும், ஆதரவையும் பெறுவீர்கள். முன்னேற்ற பாதையில் பயணிப்பீர்கள். பெண்மணிகள் சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவைப்படும்.  மாணவமணிகள் கல்வியில் தீவிர அக்கறை செலுத்தி படிப்பைத் தொடருங்கள். பெற்றோர் சொற்படி நடப்பது மேன்மையும், உயர்வையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்: மகாலட்சுமியையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 16, 17. சந்திராஷ்டமம்:  இல்லை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com