திருப்பணி

பாபநாசம் வட்டம், திருவைகாவூர் ஸ்ரீ  அருள்தரும்   சர்வஜனரட்சகி  மற்றும்  ஸ்ரீ வில்வவனேஸ்வரர்  திருக்கோயில் ஆலய  திருப்பணி நடைபெற்று வருகிறது. 
valangaiman_kumbabishegam_0603chn_100_5
valangaiman_kumbabishegam_0603chn_100_5

பாபநாசம் வட்டம், திருவைகாவூர் ஸ்ரீ  அருள்தரும்   சர்வஜனரட்சகி  மற்றும்  ஸ்ரீ வில்வவனேஸ்வரர்  திருக்கோயில் ஆலய  திருப்பணி நடைபெற்று வருகிறது. 

குலோத்துங்க  சோழனால் கட்டப்பட்டது இக்கோயில்.  காவிரி வடகரையில் எழுந்தருளியிருக்கும்  உயிர்ப்புள்ள  தலங்களில்  48}ஆவது  தலமாக இது விளங்குகிறது.  இத்தலம்  மும்மூர்த்தி  தலம் ஆகும்.  இத்தலத்தில்  எம தீர்த்தம்,  அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்  உள்ளது.  பாடல்,  அருளாசி  ஐந்திலும்  உயர்நிலைப் பெற்றுள்ளது.   இத்தலத்தின்  பெருமைகளை  திருஞான  சம்பந்தபெருமான் ஒரு பதிகம்  மூன்றாம்  திருமுறையில்  பாடியுள்ளார்.

ஏப்ரல் 6 கும்பாபிஷேகம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கோயிலின்  திருப்பணி  நிறைவுறும் தருவாயில்  உள்ளது.

இறையன்பர்கள்  திருப்பணியில்  இயன்ற பொருளதவி புரிந்து இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு:  கே.சாந்தகுமார் -6374788945, எல்.முருகன் - 9443093084

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com