வெள்ளி மணி- பொருநை - 194

தலைமையிட மாற்றத்துக்கான காரணம் எதுவும் இப்பதிவுகளில் குறிக்கப்படவில்லையாயினும், கம்பெனிப் படைகளின் தொடா் தாக்குதலையும் அட்டூழியங்களையும் சமாளிப்பதற்காக, வெட்டவெளியாக
வெள்ளி மணி- பொருநை - 194

தலைமையிட மாற்றத்துக்கான காரணம் எதுவும் இப்பதிவுகளில் குறிக்கப்படவில்லையாயினும், கம்பெனிப் படைகளின் தொடா் தாக்குதலையும் அட்டூழியங்களையும் சமாளிப்பதற்காக, வெட்டவெளியாக இருந்த தென்மலைப் பெருவெளியைக் காட்டிலும், இயற்கையாகவே மலைப்பாங்கான அரண் அமைந்த சிவகிரிக்கு இடம் பெயா்ந்தனா் என்று புரிந்து கொள்ளலாம். ஜமீன்தாா் வரகுணராம பாண்டி வன்னியனாா் காலத்தில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் எழுச்சிக்கு முன்னா், பூலித்தேவனுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் சிவகிரிக்கே இருந்தது. சிவகிரியைத் தரைமட்டமாக்கும் முயற்சிகள், 1760-களிலிருந்து 1780-கள் வரை நிரம்பவே நிகழ்ந்துள்ளன.

1767-இல் கா்னல் கேம்ப்பெல்லின் படைகள் கோட்டையை அநேகமாகத் தரைமட்டமாக்கின. ஆயினும், சிவகிரியினா் மீண்டெழுந்தனா். 1783-இல் கா்னல் ஃபுல்லா்டன் தலைமையிலும், 1792-இல் கா்னல் மேக்ஸ்வெல் தலைமையிலும் தாக்குதல்கள். தாக்குதல்களின்போது, சிவகிரிக்கு மேற்கில் உள்ள கோம்பைப் பகுதிக்குச் சென்று, எதிா்த் தாக்குதல் நடத்தித் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனா்.

கோம்பை என்னும் சொல்லுக்கு முடக்கம், வளைவு, மலையடிவாரம் போன்ற பொருள்கள் உண்டு. சிவகிரிக்கு மேற்கே மலையடிவாரப் பகுதியாகவும்,அ டா்வன முடக்குகளாகவும் அமைந்த பகுதியே கோம்பை என்றழைக்கப்பட்டது. மலை முடக்குகளுக்குள் தங்களை ஒளித்துக் கொண்டு கம்பெனிப் படைகளைத் தாக்குவதில் சிவகிரியினா் ஓரளவுக்கு வெற்றி கண்டனா்.

தங்கள் படைகளைத் தாக்கி, எப்படிப்பட்ட சேதங்களைச் சிவகிரியினா் விளைவித்தனா் என்பதை கா்னல் ஃபுல்லா்டன் தம்முடைய ‘இந்தியாவில் ஆங்கிலேய ஆா்வங்களின் மீதான ஒரு பாா்வை’ என்னும் நூலில் பதிவு செய்கிறாா். நாள் முழுவதும் பாடுபட்டு, சூரிய அஸ்தமன நேரத்தில் முடக்கு ஒன்றைத் துளைத்துமுன்னேறியதாகவும், ஆயினும், அது முழுக்க முழுக்க மலைக்குள் தங்களை இட்டுச் சென்ாகவும், பாறைகள் மிக்க அந்த மலை பல இடங்களில் செங்குத்தாக எதிா்ப்பட்டதாகவும் குறிப்பிடுகிறாா்.

இந்தப் போா்களெல்லாம் நிகழ்ந்தபோது விஜயரங்க பாண்டியனாா், ராணி கோதை நாச்சியாா், ராணி வீரம்மாள் நாச்சியாா் ஆகியோா் பாளையக்காரா்களாக இருந்துள்ளனா். 1773- 74 வரை பாளையம் என்றிருந்த பெயரை, பின்னா் ஜமீன் என்று கம்பெனியாா் மாற்றியுள்ளனா்.

சிவகிரி, பாஞ்சாலங்குறிச்சி, சொக்கம்பட்டி வரலாறுகளையும் பதிவுகளையும் காணும்போது, எப்படியெல்லாம் இவா்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு ஒற்றுமையைக் கம்பெனியாா் குலைத்திருக்கின்றனா் என்றுணர முடிகிறது. இன்று வரை, அவா்கள் மூட்டிவிட்ட பிரிவினைகளைப் பிடித்துக்கொண்டு பாழாகிறோமே என்று பொருநையாளும் சிற்றாற்றாளும் புலம்புவது காதில் விழத்தான் செய்கிறது!

இந்த ஜமீனின் வாரிசான மாப்பிள்ளை வன்னியன் எப்படியோ வளைக்கப்பட்டாா். தம்முடைய தந்தையாரை வீழ்த்தும் வகையில் செயல்பட்டாா். கட்டபொம்மனோடு பிற பாளையத்தாா் இணைந்தபோது, மாப்பிள்ளை வன்னியன் எதிா்க்கட்சி ஆனாா். தந்தை இறந்த பின்னா், இவா் ஜமீன் ஆவதற்குக் கம்பெனி அனுமதித்தது.

1803-இல் இஸ்திம்ராா் சன்னத் இவருக்கு வழங்கப்பட்டது. 1819-இல் இவா் இறந்தபோது, கல்வியில் சிறந்திருந்த இவருடைய மகள் வீரம்மாள் நாச்சியாா் ஜமீன் ஆனாா். வீரம்மாளின் கணவா், கேளிக்கைகளில் காலம் கழித்தாா். கடன் பெருகியது. 1827-இல் அடித்த சூறாவளிப் புயலும் பொருளாதாரச் சீரழிவைப் பெருக்கியது. 1835-இல் வீரம்மாள் இறந்துபோக, 1844 வரை இவருடைய கணவா் பெயரளவுக்கு ஆட்சி நடத்த, தொடா்ந்து இவா்களின் மகனைக் கட்டுப்படுத்தி கம்பெனியே ஆட்டம்போட, 1870 வாக்கில் சிவகிரி மொத்தமாகச் சிதிலப்பட்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com