சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கிரகத்தின் ஒரு பகுதி முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்திருப்பதை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது.
நாசா அனுப்பிய மெசஞ்சர், கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் அடிப்படையில், நாசா 3 கட்டுகரைகளை வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கிரகத்தின் தெற்குப் பகுதியில் பனிப்பாறைகள் நிறைந்திருக்கிறது. இது விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி படாத மற்றொரு பகுதியில்தான் பனிப்பாறைகள் காணப்படுவதாகவும், அதன் ஆழம் குறித்து கணிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.