உலகம்
பாகிஸ்தானில் லாரி-பஸ் மோதி விபத்து: 42 பேர் சாவு
பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்ஹதில், ஒரு பெண், சிறுவன் உள்பட 42 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்ஹதில், ஒரு பெண், சிறுவன் உள்பட 42 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தென்கிழக்கிலுள்ள தேரா காஸிகான் நகரிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு கராச்சி நோக்கி ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது சுக்கூர் மாவட்டத்தின் பனோ அகில் என்ற பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.