சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது. இதையடுத்து லண்டன் முதல் இஸ்லாமாபாத் வரை அந்நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் நடைபெறவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 2008, செப்டம்பர் மாதம் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டு விமான சேவையை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியது.
இது வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு தொடக்கம், இதன்மூலம் வணிக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்படும் என பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டாக தெரிவித்தனர்.