பிரான்ஸிலுள்ள புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ஸ்ட்ராஸ்பர்க் நகரில் கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடத்திய ஷெரீஃப் ஷேகத்தின் சகா ஒருவரை கைது செய்துள்ளோம்.
அந்தத் தாக்குதல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், 37 வயதான அந்த நபரின் அடையாளத்தை அவர்கள் வெளியிடவில்லை.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் ஷெரீஃப் ஷேகத் (29) என்ற நபர் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய ஷெரீஃப் ஷேகத்தை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.