கம்பாலா: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் சாலைகள் அரசால் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள மலைப்பாதை வழியே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலைதடுமாறிய பேருந்து மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குளானது.
இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.