அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள தௌஸன்ட் ஓக்ஸ் நகரில் இக்கோரச் சம்பவம் நடைபெற்றது. அங்கு கல்லூரி மாணவர்கள் பலர் கூடியிருந்த நிலையில், கறுப்பு உடையில் வந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதில் போலீஸ் அதிகாரி உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு கேளிக்கை விடுதியில் அந்த மர்ம நபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு நபரால் சுடப்பட்டாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வென்ட்சுரா கௌன்டி போலீஸ் அதிகாரி ஜெஃப் டீன் தெரிவித்தார்.