அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த மாகாணத்தின் பியூட் மாவட்ட காவல்துறை அதிகாரி கொரே ஹோனியா கூறுகையில், வடக்கு கலிஃபோர்னியா பகுதி காட்டுத் தீ காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சிலர் வாகனங்களிலும் இருந்தபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து தகவல்கள் இல்லை என்று தெரிவித்தார்.
கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில், சுமார்140 சதுர கி.மீ. பரப்பளவில் பரவி வரும் காட்டுத் தீயினால், இதுவரை 6,500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.