காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் ஒன்றில் உள்ள உள்ள மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 27 படைவீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த முகாமுக்குள் மசூதி ஒன்றும் அமைந்துள்ளது.
வெள்ளியன்று அந்த மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மசூதி அமைந்திருந்த பகுதியில் காவலில் இருந்த 27 படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக மரணமடைந்தனர்.
தாக்குதல் சம்பவம் பற்றிய தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.