சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.