பாகிஸ்தானில் தூய்மை மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக, "தூய்மை பாகிஸ்தான்' என்னும் திட்டத்தை அந்த நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது, "ஐரோப்பிய நாடுகளை விட சுத்தமான நாடாக பாகிஸ்தானை மாற்றிக் காட்டுவேன்' என்று அவர் சூளுரைத்தார்.